Header Ads



சிறைச்சாலை காற்சட்டையுடன் ஞானசாரர் - சிங்கள ராவய மகா நாயக்கர்களிடம் முறைப்பாடு (படம்)


பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை மற்றும் துறவாடை அகற்றப்பட்டமையை தெளிவுப்படுத்த சிங்கள ராவய மற்றும் பொதுபால அமைப்புக்கள் இன்று மகா நாயக்கர்களை சந்திக்கின்றனர்.

ராமாக்ஞ நிக்காயவின் மாகாநாயக்கர் நாபான பேமசிறி தேரர் மற்றும் அஸ்கிரிய பீட பதிவாளர் மெதகம தம்மாநந்த தேரர் ஆகியோரை இதுவரை சந்தித்துள்ளனர்.

இதன்போது கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக சிங்கள ராவய அமைப்பின் பொது செயலாளர் மாகல் கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த படம் jaffna muslim இணையத்திற்கு தமிழ் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் மூலமாக கிடைத்தது


No comments

Powered by Blogger.