சிங்களவர்கள் தெரிவித்த பெருநாள் வாழ்த்து - கராபுகஸ்சந்தியில் மிளிர்ந்த நல்லிணக்கம்
நோன்பு பெருநாள் தினத்தன்று சிங்கள இளைஞர்கள் சிலர் நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மல்வாணை, வல்கம பிரதேசத்தின் கராபுகஸ்சந்தி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் பெருநாள் கொண்டாடுவதற்காக அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கராபுகஸ்சந்தி நகரத்தில் வாழ்த்து தெரிவித்து அலங்கரித்திருந்தனர்.
மல்வாணை, வல்கம, கராபுகஸ்சந்தி பகுதியில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதனை வெளிப்படுத்துவதற்காக முதல் முறையாக இவ்வாறு அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment