Header Ads



நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை, நீக்கப்பட்டால் நாடு சோமாலியா ஆகிவிடும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அரசமைப்பின் 20வது திருத்தத்தை தற்போது சமர்ப்பிப்பதால் பாரிய பிரச்சினைகள்  உருவாகலாம் என உயர்கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி அமைப்புள் ஸ்திரமற்றவையாக காணப்படும் இந்த தருணத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கினால் நாடு முற்றுமுழுதாக குழப்பத்திற்குள் சிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

20வது திருத்தம் தொடர்பில் முக்கிய பிரச்சினை உள்ளது இது தனியொரு கட்சி அல்லதுநபர் தொடர்புபட்ட விடயமல்ல இது முழு நாட்டையும் பாதிக்ககூடிய விடயம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரஜனாதிபதிமுறையும் விகிதாச்சார பிரதிநிதித்துவமுறையும் ஒன்றாகவே அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கிவிட்டு விகிதாச்சார முறையை நீக்காவிட்டால் பாரிய குழப்பம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறை மாற்றப்பட்டால் ஸ்திரமற்ற உள்ளுராட்சி சபைகள் உருவாகியுள்ளன,மாகாணசபைகள் தேர்தல் முறையும் மாற்றப்பட்டுள்ளது, இந்த நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நீக்கப்பட்டால் நாடு சோமாலியா ஆகிவிடும் என உயர்கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் நீக்காமலேயே இப்போது சோமாலியாவுக்கு மிக அண்மையில் இலங்கையைக் கொண்டுவந்து வைப்பதில் பெரும்பங்கு வகித்த இந்த அமைச்சர் என்ற மிகவும் கவயைாக செய்தியை இந்த நாடு அறியும்

    ReplyDelete

Powered by Blogger.