Header Ads



அரசாங்கத்தில் பிளவு ஏற்படவில்லை, முரண்பாடே ஏற்பட்டுள்ளது - ரணில்

அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்றைய -01- தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து உரையாற்றுக்கையில்...

பொதுவாக அரசியலில் சில முரண்பாடுகள் ஏற்படுவது வழமையானது.இவ்வாறான முரண்பாடுகளை களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே மக்கள் ஆணையளித்துள்ளதாகவும், நாட்டை அபிவிருத்தி செய்யுமாறு நான் அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 18 மாதங்களில் துரிதப்படுத்தப்படும்.

அரசாங்கம் ஏற்கனவெ ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத் திட்டம் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் என்பனவற்றை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.