இலங்கையிலிருந்து ஹஜ் செல்லும் பணிகள் நிறைவு - அனுமதி கிடைக்காதோர் கட்டணத்தை மீறப் பெறலாம்
இவ்வருடம் ஹஜ்யாத்திரை மேற்கொள்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு விட்டது. இது தொடர்பாக ஹஜ் கடமைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறாத ஹஜ் பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ள விண்ணப்பதாரிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திட மிருந்து பதிவுக்கட்டணங்களை மீளப் பெற்றுக்கொள்ள லாம் என அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறான ஹஜ் விண்ணப்பதாரிகள் திணைக்களம் வழங்கியுள்ள கட்டணத்துக்கான பற்றுச்சீட்டுடன் திணைக்களத்துக்கு வருகை தந்து பதிவுக் கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரிகள் தமது பயணத்தை உறுதி செய்வதற்காக மீள கையளிக்கப்படும் வகையிலான பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபா திணைக்களத்துக்கு செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் இலங்கைக்கு 3000 ஹஜ் கோட்டாவே கிடைத்துள்ளது.
ஆனால் 3000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகள் பதிவுக்கட்டணமாக தலா 25 ஆயிரம் ரூபா செலுத்தியிருந்தனர். அவ்வாறு மேலதிகமான விண்ணப்பதாரிகளின் பதிவுக்கட்டணமே திருப்பிக் கையளிக்கப்படவுள்ளன.
இந்த 3000 என்ற எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் இலவசமாக ஹஜ்ஜுக்கு மேல் ஹஜ்ஜு செய்யும் அமைச்சர்கள் , பரிவாரங்கள் மற்றும் பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அடங்கலாகவா?
ReplyDeleteஅவ்வாறு அடங்கலாக வெனில் ஒன்றுக்கு மேல் ஹஜ் செய்யும் அமைச்சர்கள் பரிவாரங்கள் விட்டுக்கொடுப்புடன் நடந்தால் எமது இஸ்லாமிய பொதுமக்கள் சிலருக்கு ஹஜ்ஜு-செய்வதற்கான வாய்ப்பு கிட்டுமல்லவா.
IPPADIYELLAM IDEA IRUNDAL NAMMA NAADU KUTTY JAPAN POLA AAVI IRKKUMALLAWA????
ReplyDelete