Header Ads



துப்பாக்கி மோதலில், ஹீரோவாக மாறிய இளைஞன்

மாத்தறையில் நகை கடையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்களின் துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.

குறித்த பொலிஸ் அதிகாரியை தனியாக தூக்கி வாகனத்தில் ஏற்றிய இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இளைஞனின் செயற்பாடு குறித்து தற்போது பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் மட்டுமன்றி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரை பாராட்டியுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு பணப்பரிசு ஒன்றை வழங்குவதோடு அவரின் செயற்பாட்டிற்கு கௌரவம் வழங்கவும் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதித்த 33 வயதான பொலிஸ் அதிகாரி சுரங்க பிரதிப் உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.