மஹிந்தவை பிரதமராக்க, ஒன்றிணையுமாறு அழைப்பு
மஹிந்தவைப் பிரதமராக்கும் நடவடிக்கையில், தற்பொழுது அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 23 பேரும் வந்து இணைந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவை பிரதமராக்குவதற்குத் தேவையான முக்கிய நடவடிக்கையொன்றை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள முற்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொள்ளலாம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்போது அரசியல் செய்யும் பகடைக்காய்கள் இரவில் மட்டுமன்றி பகலிலும் பகற்கனவும் கற்பனைக்கனவும் கண்டு அது பற்றி மக்களைக்குழப்பவும் முற்படுவது உலகில் இலங்கையில் மட்டும்தான். இது தான் உலகில் ஆச்சரியம்
ReplyDelete