Header Ads



அது பொய்யான செய்தி

லண்டனில் உள்ள இலங்கை இணையத்தளம் ஒன்றின் ஆசிரியரை கைது செய்யுமாறோ அல்லது நாட்டிற்கு  தாம் கோரவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது பொய்யான செய்தி என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது

இதன்போது குறித்த இணையத்தள ஆசிரியரை லண்டனில் இருந்து திருப்பியனுப்புமாறு ஜனாதிபதி கோரியதாக ஞாயிறு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் குறித்த செய்தி பொய்யானது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், எவரையும் திருப்பியனுப்புமாறு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் ஜனாதிபதி கோரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது

1 comment:

  1. According to TNL telecast, we are not in a position to believe your statements Sir.

    ReplyDelete

Powered by Blogger.