Header Ads



ஜனாதிபதியும் பணம் பெற்றுக்கொண்டாரா..?

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்டீர்களா என்பதனை தெளிவுபடுத்துங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்,

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அர்ஜூன் அலோசியஸிடமோ அல்லது அவருக்கு சொந்தமான நிறுவனங்களிடமோ பணம் பெற்றுக் கொண்டிருந்தாரா என்பது பற்றி அறிவிக்க வேண்டுமென கோரியுள்ளது.

பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அதனையும் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய அரசியல்வாதிகள் ஏற்கனவே தாம் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்டதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அர்ஜூன் அலோசியஸிடம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என அண்மையில் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஊகம் வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டுமென நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

No comments

Powered by Blogger.