Header Ads



மாட்டுடன் மோட்டார்சைக்கிள் மோதி, ஒருவர் பலி

வவுனியா, சூடுவெந்த புலவு பகுதியில் இன்று (05) காலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெரிய உளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாதையின் குறுக்காக பயணித்த மாடு ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் 53 வயதுடைய துரைசாமி திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்துள்ளதுடன் 48 வயதுடைய பொன்னம்பலம் ஜெயகுமார் என்பவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்து தொடர்பில் பெரிய உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 comments:

  1. Now a gang of cows will do a protest against to a human has been killed by a cow

    ReplyDelete
  2. Thinai vithaithavan thinai aruppan vinai vithaithavan vinai aruppan, mattu mula ullavanigalukku madu muttithan savu since they do the compation against madu so ethuna nalikkuthan madu porukkum.

    ReplyDelete

Powered by Blogger.