Header Ads



மஹிந்தவுக்கு எதிராக, ரஞ்சன் ராமநாயக்கா முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸ் நிதிமோசடிப்பிரிவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சீனா 7.6 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தே பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸ் நிதிமோசடிப்பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவ்வாறு மஹிந்த ராஜபக்ச எந்தவொரு நிதி உதவியும் பெற்றுக் கொள்ளவில்லை ஆயின் அது தொடர்பாக சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பிக்கத் தயாரா என்றும் ரஞ்சன் ராமநாயக்க சவால் விட்டுள்ளார்.

மேலும் குறித்த செய்திப் பத்திரிகை போலியான செய்தியொன்றை வெளியிட்டிருக்கும் பட்சத்தில் அதுதொடர்பாக மான நஷ்ட வழக்கொன்றைத் தொடர முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.