ஞானசாரருக்கு இன்று தண்டனை, நீதிமன்றத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு, பிக்குகளும் வருகை
ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு இன்றைய தினம் -14- பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்டுள்ளதால், இவருக்கான தண்டனை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதால், நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுன்றது.
இதேவேளை ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 10 பேரைக்கொண்ட பிக்குகள் அடங்கிய குழுவொன்று நீதிமன்ற வளாகத்தில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்புக்காக, உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment