எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலே, இறுதி சந்தர்ப்பம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலே நாட்டின் எதிர்காலம் குறித்து தீர்மானத்தை எடுப்பதற்கான இறுதி சந்தர்ப்பம் என கொழும்பு ஸ்ரீதர்ம நிறுவனத்தின் விகாராதிபதி எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -23- நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை இந்த வைபவத்தில் உரையாற்றிய தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கர் கிரம விமலஜோதி தேரர், பௌத்த பிக்குமார் பிளவுப்பட்டுள்ளதன் காரணமாகவே அரசியல்வாதிகளுக்கு நாட்டை அழிக்க முடிந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
பௌத்த அதியுயர் பீடம் ஒன்றை உருவாக்க தாம் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாகவும் மல்வத்து பௌத்த பீடத்தின் சில காவிதாரிகள் அதனை விரும்பவில்லை எனவும் விமலஜோதி தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment