மன்னாரில் கழுதைகளுக்காக வைத்தியசாலை -
மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் வைத்தியசாலை மற்றும் கல்வி மையம் ஆகியவை இன்று காலை உத்தியோகப் பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் குறித்த கழுதைகள் வைத்தியசாலை மற்றும் கல்வி மையம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் பிரதம விருந்தினராக உலக மிருகங்கள் பாதுகாப்பு அமையத்தின் பிரதிநிதி ஒட்தார குணவர்த்தன கலந்து கொண்டதோடு, விருந்தினர்களாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் முஹமட் முஜாகிர், உறுப்பினர்கள், நகர சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் காயமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழுதைகளை பராமரிக்கும் இடமாக இந்த வைத்தியசாலை உருவாக்கப்பட்டுள்ளதோடு, கழுதைகள் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு அதனை பழக்கப்படுத்தி பயனுள்ள நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தும் நடவடிக்கைகளும் குறித்த நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அட! இதன் பிறகு அரசியல்வாதிகள் சிறையில் அடைக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டால் இந்த வைத்தியசாலைக்கு மாற்றலாமே.
ReplyDelete