Header Ads



பிரதியமைச்சர் மஸ்தானுக்கு வாழ்த்துக்கள்



-நடிகர்/கவிஞர் ஜெயபாலன்-

மீள்குடியேற்றம் வடபகுதி அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்ற காதர் மஸ்தான் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்து கலாசார பிரதி அமைச்சர் பதவியை மறுத்து பதட்ட நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தமைக்கு நன்றிகள்.   

ஒருபக்கத்தில் மாநுட விரோதமாய் மாடிறைச்சியை தடை செய்யென்றும் மறுபக்கத்தில் அதர்மமாக என் பிரதி அமைச்சு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்துக் கோவில் காணியை அபகரித்தேன் என்றும் வீரியம்பேசும் இந்து முஸ்லிம் அடிபடை வாதிகள்கையில் இந்து கலாச்சார பிரதி அமைச்சர் விவகாரம் ஆயுதமாக மாறப்போகிறதே என நாம் கலவரமடைந்திருந்தோம். நல்ல வேழையாக தவறு திருத்தபட்டுள்ளது. 

ஆனாலும் இன்னும் சமூக வலைத் தழங்களில் இப்பிரச்சினை தொடர்ந்து அலசப்படுவது கவலை தருகிறது. தயவு செய்து இப்பிரச்சினையை இத்துடன் விட்டுவிடுங்கள்.

1 comment:

  1. Dear ஜெயபாலன் சார், இந்து காணியை அபகரித்த முஸ்லிம் பிரதி அமைச்சர் மீது ஏன் இன்னும் இந்து அமைப்புகள் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவில்லை?,
    ஏன் அந்த காணிகளை திரும்ப பெற முயற்சிக்க வில்லை?
    இது நீங்கள் கிழக்கு இந்து தமிழர்களுக்கு செய்யும் அநியாயமாக ஏன் பார்க்கவில்லை??

    ReplyDelete

Powered by Blogger.