ஜம்இய்யத்துல் உலமா, வெளியிட்டுள்ள முக்கிய பத்வா
உலகின் ஒரு பகுதியில் நோன்பை ஆரம்பித்த ஒருவர் இன்னொரு பகுதியில் இருபத்தெட்டாக அல்லது முப்பத்தொன்றாக பூர்த்திசெய்ய நேரிட்டால்… எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா ஒன்றை வெளியிட்டுள்ளது.
அ.இ.ஜ.உ.வின் பத்வாக் குழு செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.இல்யாஸ், மேற்பார்வையாளர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம் சூரி, உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் (கபூரி) , தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி (முப்தி) ஆகியோர் ஒப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள பத்வாவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஓர் இடத்தில் உள்ள மக்கள் அனைவரும் நோன்பு நோற்கும்போது அவர்களுடன் சேர்ந்து ஒவ்வொருவரும் நோன்பு நோற்பதும், அவர்கள் நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடும்பொழுது அவர்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடுவதும் அவசியமாகும் என்று முற்கால மற்றும் சமகால அறிஞர்கள் கூறியுள்ளனர். இதற்கு பின்னரும் ஹதீஸ் அடிப்படையாக உள்ளது.
உங்களது நோன்பு நீங்கள் அனைவரும் நோன்பு நோற்கும் பொழுதாகும். நீங்கள் நோன்பை முடிப்பது, நீங்கள் அனைவரும் நோன்பை முடிக்கும் பொழுதாகும். உங்களது ஈதுல் அழ்ஹாவுடைய பெருநாள் நீங்கள் அனைவரும் பெருநாள் கொண்டாடும் நாளாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
நூல்கள்: ஸுனன் அல்– திர்மிதி 697, ஸுனன் இப்னி மாஜஹ்–1660, அல்–ஸுனன், அல்–குப்ரா 8010, ஸுனன் அபீ தாவூத்–2324, ஸுனன் அல்–தராகு-த்னி–2177.
பொதுவாகப் பிறை மாதங்கள் இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்களாகவே இருக்கும் என அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள், “மாதம் என்பது இப்படியும் இப்படியும் இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக்காட்டி) முப்பது நாட்கள் எனக்கூறிவிட்டு பிறகு “மேலும் இப்படியும் இப்படியும் இப்படியும் இருக்கலாம்” (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக்காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். (நூல்கள் ஸஹீஹுல் புகாரி– 5302, ஸஹீஹு முஸ்லிம்–1080)
அதாவது மாதம் என்பது சிலவேளை முப்பது நாட்களாக அல்லது இருபத்தொன்பது நாட்களாக இருக்கும் என்று கூறினார்கள்.
இவ்வாதாரங்களை அடிப்படையாக வைத்து மார்க்க அறிஞர்கள் பிறை மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களை விடக்குறையாது எனும் விடயத்தில் “இஜ்மா” கருத்தொற்றுமைப்பட்டுள்ளனர். மேலும் இருப்தொன்பதாவது தினம் மாலை பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை முப்பதாகப் பூர்த்திசெய்ய வேண்டும்.
“நீங்கள் அதை (பிறையைப்) பார்த்தால் நோன்பை ஆரம்பித்துக்கொள்ளுங்கள். மேலும் அதைப் பார்த்தால் நோன்பை முடித்துவிடுங்கள். உங்களுக்கு அது மறைக்கப்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகப் பூர்த்திசெய்து கொள்ளுங்கள்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: ஸஹீஹு-ல் புகாரி– 1907, ஸஹீஹு முஸ்லிம்–1081)
இவ்வடிப்படையில் ஒருவர் எப்பகுதியில் இருக்கின்றாரோ அப்பகுதியில் உள்ள மக்கள் நோன்பை ஆரம்பிக்கும்பொழுது அவரும் நோன்பை ஆரம்பிப்பதும் அவர்கள் நோன்பை முடித்து பெருநாள் கொண்டாடும்போது அவரும் அவர்களுடன் பெருநாள் கொண்டாடுவதும் அவசியமாகும்.
மேலும் ஒருவர் ஒரு பகுதியில் அப்பகுதி மக்களுடன் நோன்பை ஆரம்பித்து பின்பு இன்னும் ஒரு பகுதிக்குச் சென்று அங்கு பெருநாள் வரை தங்கியிருந்தால், அவர்கள் ரமழானை முடித்து பெருநாளை கொண்டாடும் தினத்திலேயே அவரும் பெருநாளை கொண்டாடுவார். இரு பகுதிகளிலும் ரமழான் வேறுபட்ட தினங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் சரியே!
அவ்வாறு குறித்த நபர் ரமழானை முடிக்கும்போது முப்பதொரு நாட்கள் நோன்பு நோற்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும் அப்பகுதி மக்களுடன் அவர் அவரது முப்பத்தொராவது நோன்பையும் நோற்று அவர்கள் பெருநாள் கொண்டாடும்போது அவரும் பெருநாள் கொண்டாடுவார்.
அதேபோன்று அம்மக்கள் பெருநாள் கொண்டாடும்பொழுது குறித்த நபர் இருபத்தெட்டு நோன்பை முடித்திருந்தால் அம்மக்களுடன் பெருநாளை கொண்டாடிவிட்டு பிறிதொரு நாளில் ஒரு நோன்பை கழா செய்து கொள்வார். ஏனெனில் ஒரு மாதம் குறைந்தது இருபத்தொன்பது நாட்களாகவே இருக்கும் என்பது மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து தெளிவாகின்றது.
அவ்வாறே ஒரு பகுதியில் ரமழான் மாதத்திற்கான தலை பிறை தென்பட்டு அல்லது ஷஃபான் மாதத்தை முப்பதாகப் பூர்த்திசெய்து ரமழான் மாதத்தின் நோன்பை ஆரம்பித்ததன் பின்னர் இருபத்தெட்டாவது நாளில் தலை பிறை தென்படுவதற்கான வாய்ப்பு இருந்து உறுதியான சாட்சிகள் மூலம் பிறை தென்பட்ட விடயம் நிரூபிக்கப்பட்டால் இருபத்தொன்பதாவது நாளில் பெருநாள் கொண்டாடிவிட்டு பிறிதொரு நாளில் ஒரு நோன்பை கழா செய்வதும் அவசியமாகும்.
இவ்வாறான ஒரு நிகழ்வு அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் நடைபெற்று அவர்கள் மக்களை ஒரு நோன்பைக் கழா செய்துகொள்ளுமாறு ஏவினார்கள் என்ற விடயம் ஸுனன் அல்–பைஹகி மற்றும் முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளன.
அவ்வாறே சவூதி அரேபியாவிலும் ஹிஜ்ரி 1404 ஆம் ஆண்டு மேக மூட்டம் காரணமாக ஷஃபானை முப்பதாகப் பூர்த்தி செய்து ரமழானை அந்நாட்டு மக்கள் ஆரம்பித்தனர் என்றாலும் இருபத்தெட்டாவது தினம் பிறை தென்பட்டதாக நிரூபிக்கப்பட்டதால் பிறிதொரு நாளில் நோன்பைக் கழா செய்வது அவசியம் என்று சவூதி அரேபியாவின் ஆய்வுக்கும் பத்வாவுக்குமான நிரந்தர அமைப்பு பத்வா வழங்கியது.
எனவே, ரமழானுடைய மாதம் ஏனைய பிறை மாதங்களை போன்று இருபத்தொன்பது அல்லது –முப்பது நாட்களாகவே இருக்கும். அவ்வாறு இருபத்தெட்டாவது தினம் ஷவ்வால் பிறை தென்பட்டது நிரூபிக்கப்பட்டால் பெருநாள் கொண்டாடி விட்டு இன்னும் ஒரு நாளில் ஒரு நோன்பைக் கழா செய்து கொள்வது அவசியமாகும்.
மேற்கூறப்பட்ட விடயங்கள் பற்றிய தெளிவுகள் அனைத்தும் பல இஸ்லாமிய சட்ட நூல்களில் பதிவாகியுள்ளன. குறிப்பாக ஷாபிஈ மத்ஹபின், மின்ஹாஜுத் தாலிபீன் மற்றும் அதனுடைய விரிவுரை நூல்கள், இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ் மற்றும் ஹனபி மத்ஹபுடைய ரத்துல் முஹ்தார் மற்றும் ஹனபி மத்ஹபின் தற்கால பத்வா நூல்களான “அஹ்சனுல் பதாவா”, “பதாவா றஹீமிய்யா” போன்ற நூற்களின் ஆசிரியர்கள், ஜோர்தான் நாட்டு உத்தியோகபூர்வ பத்வா நிலையம் சமீபகால அறிஞர்களான அஷ்ஷெய்க் இப்னு பாஸ் மற்றும் அஷ்–ஷெய்க் இப்னு உஸைமீன் போன்ற இன்னும் பலர் இக்கருத்தை கூறியுள்ளனர்.
-Vidivelli
Suppose, if I go to MOON during Ramadhan, how I should start fast, end fast, and celebrate Eid. Your fathwa with eveidence please.
ReplyDeleteThis is for M.Y.Shihabdeen, the above article gives the ruling along with the necessary evidence which is provided in details. please read the article till end. Thanks
ReplyDeleteஉலமாக்கள் எமது வழிகாட்டிகள் அவர்களது வழிகாட்டலில் ஒன்று பட்டு ஐக்கிய படுவதே காலத்தின் தேவையாகும்
ReplyDeletePTS: I raised my question having gone through the above article very well. So I don’t need to read it again. If you have the answer, why don’t you give it in detail for me and to others too.
ReplyDeleteHave a doubt. Is PTS an official service of ACJU?
Br. Shihab please ask any practical question
ReplyDeleteMr Fazil: Who says that my question is impractical? Anyone can travel to moon with US $ one million in this century. Are you still living in Jahiriya?
ReplyDeleteBro Shihab, குதர்க்கமான விதண்டாவாதமான கேள்வி கேட்டு நேரத்தை வீணடிப்பதை விடுத்து அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். முதலில் நீங்கள் என்ன சந்திரமண்டலத்திற்குப் போகப்போகிறீரா? இல்லையே அப்படிருக்க ஏன் இந்த வீணான கேள்வி?
ReplyDeleteநீங்கள் பயணத்தில் இருந்தால், அல்லது நோயயுற்றிருந்தால் பிரிதொருநாளில் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள் என்பது இறை வசனம். எனவே சந்திரனில் நீங்கள் இருந்தால் பயணத்தில் இருக்கின்றீகள் எனவே பூமிக்கு திரும்பி வந்து அந்த நோன்பை நோற்றுக் கொள்ளலாம். இல்லை நான் நோன்பு பிடித்தே ஆகவேண்டும் என்றால்
– பூமியின் சுற்று வட்டத்தைத் தாண்டி சந்திரமண்டலத்திற்குப் போகின்றவர்கள் –
கிரீன்னிச் நேரத்தின் படியே செயற்படுவதால் அதனை அடிப்படையாகக் கொண்டு உங்கள் கருமங்களை ஆற்ற வேண்டும். எனவே நோன்பை தொடங்குவதும் துறப்பதும் கிரீன்னிச் நேரத்துக்கமைவாக அமையும். அல்லது இஸ்லாம் அருளப்பட்ட மக்காவின் நேரத்தை அடிப்படையாகக் கொண்டுநோன்பை தொடங்குவதும் துறப்பதும் அமையும். இதற்கு ஆதாரமாக தஜ்ஜாலின் வருகை தொடர்பான ஹதீது அமைகின்றது. அதனை ஆராயுங்கள்.
Prayers times are based on dawn and dust of sun. My question is start and end of month of Ramadan which is based on the movment of moon
ReplyDeleteDear Sajan,
ReplyDeleteYou asked previously “ if I go to MOON during Ramadan” and we answered accordingly. Now you said how to starts Ramadan. You behaved like a child. Think probably what you want to ask than shoot your questions. However, you should follow the ground station where the people lives.