Header Ads



பைசூலின் மரணத்திற்கு, பொறாமையே காரணம் - சந்தேகமான மாணவர்கள் சீர்திருத்த பள்ளியில் தடுத்துவைப்பு

உயிரிழந்த மொஹமட் ரிஸ்வி மொஹமட் பைசூல் மீதான தாக்குதல் தொடர்பில், அரசாங்க சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வைக்கப்பட்டுள்ள 3 மாணவர்களையும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வழக்கு இன்று (26) சிலாபம் மாவட்ட நீதிபதி மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் 3 பேரும் கடந்த சில தினங்களாக சிலாபம், ஆரச்சிக்கட்டுவ சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்களை இனி நீர்கொழும்பு முதித சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த 16 வயதுடைய மொஹமட் பைசூல், சிலாபம் சவரான வித்தியாலயத்தின் பிரதான மாணவ தலைவனாக கடமையாற்றியுள்ளார். 

உயிரிழந்த மாணவனுக்கு அண்மையிலேயே பிரதான மாணவ தலைவன் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் இதனால் பொறாமை கொண்ட சில மாணவர்களே மொஹமட் பைசூல் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் உறவினர்கள் தெரித்துள்ளனர்.

2 comments:

  1. why Muslims are keeping silence ??
    in every community this kind of incidents are happening. we have to think how to avoid this kind of incidents in future .

    this post for some kind of resist buggers are in this website this post for them only

    what ever is happend where is hindu where is buddist? accept Muslims also doing mistake but its not coming out because Muslims doesn't like to put there community down.

    ReplyDelete
  2. Proof that every community has the savages..

    ReplyDelete

Powered by Blogger.