மைத்திரிபாலவின் உத்தரவில், கோத்தாவுக்கு சிறப்பு அதிரடிபடை பாதுகாப்பு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கோத்தபாய ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு அமைய சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோத்தபாயவின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளருக்கு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் கோத்தபாய போட்டியிடவுள்ளார். இதன் முன்னேற்பாடாக நாடு முழுவதும் பிரச்சார நடவடிக்கையில் கோத்தபாய ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இரு சிறப்பு அதிரடி படையினர் குழுக்கள் கோத்தபாயவுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment