Header Ads



மாவனல்லையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

மாவனல்லையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டத்தை முகநூல் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்தமைக்காக ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ‘டெய்லி சிலோன்’ இனையதளத்தின் செய்தி ஆசிரியரும் ‘மாவனல்லை நியூஸ்’ என்ற இணையதளத்தின் பிரதான ஆசிரியருமான ஆஸிக் நஸார்டீன் என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

மாவனல்லையில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாடசாலையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு ஊடக அனுசரணை வழங்குமாறும், நிகழ்வை முகநூல் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யுமாறும் பாடசாலை அதிபரால் குறித்த ஊடக வலையமைப்பிடம் எழுத்து முலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தமது கடமைகளை ஆற்றச் சென்ற போது குறிப்பிட்ட சிலரால் முகநூல் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சபையில் அமைதியற்ற நிலை ஏற்படவே ஊடகவியலாளர்  மற்றும் அவரது உதவியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் மாவனல்லை நியூஸ் இணையத்தளத்திற்க்கு சொந்தமான உபகரணங்களும் இதன் போது சேதமாக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இத்தாக்குதல் சம்பவத்தை தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் - நுஜா ஸ்ரீலங்கா வன்னமையாக கண்டிக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.