Header Ads



முஸ்லிமொருவருக்கு எவ்வாறு, இந்து பிரதியமைச்சை வழங்கமுடியும் - கொதிக்கிறார் வடிவேல்

காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகொத்தாவில் இன்று -12- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, காதர் மஸ்தானுக்கு வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இங்கு முஸ்லிமொருவருக்கு எவ்வாறு, இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவியை வழங்க முடியும். நல்லாட்சியில் ஒரு இந்துவும் இல்லையா குறித்த அமைச்சு பதவியை வழங்குவதற்கு.

இந்த செயற்பாடு இந்துக்களை கொச்சைப்படுத்தும் அவமானப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது. இதனை எந்தவொரு இந்துவும் அனுமதிக்க முடியாது.

இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களின் எதிரப்பையும் சந்திக்க நேரிடும்.

இதேவேளை, காதர் மஸ்தானும், நானும் இயல்பாகவே நல்ல நண்பர்கள். எனக்கும் அவருக்குமிடையில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.

இவ்வாறு முஸ்லிம் ஒருவருக்கு இந்து விவகாரம் தொடர்பில் ஒரு அமைச்சுப்பொறுப்பை வழங்கினால் இந்துக்கள் இந்த விடயத்தை எவ்வாறு நோக்குவரென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. As a real muslim I agree with opinion of minister vadivel Suresh

    ReplyDelete
  2. இது தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் கோத்துவிட ஜனாதிபதியால் எடுத்த முடிவு. மஸ்தான் அவர்கள் நம்பிக்கையாக அந்த பதவியை ஏற்றுள்ளார். அவரே குறிப்பிட்டுள்ளார் தான் பிரதிநிதித்துவம் செயும் மாவட்டத்திலுள்ள இந்துகளுக்கு சேவை செய்ய தான் இந்த பதவியை பெற்றுள்ளேன் என. யார் பதவியை பெற்றால் என்ன இன மத பேதமின்றி சேவை செய்ய. ஆனால் இந்த பதவிக்கு அமீரலி போன்ற தமிழர் மனதில் இடம்பிடித்த நல்லுள்ளங்களை நியமித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உங்கள் தொண்டு இந்து மதத்துக்கு தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

    ReplyDelete
  3. திரு காதர் மஸ்தான் பதவி ஆசையால் தமிழர் மலையக தமிழரையும் முஸ்லிம்களையும் மோதவிடும் சூட்ச்சிக்கு துணைபோகிறார். அரசு நாளை முஸ்லிம் விவகாரங்களை சிங்கள அமைச்சர்களின்கீழ் கொண்டு செல்வதற்க்கு மட்டுமே காதர் மஸ்தானின் துரோகம் வழிவகுக்கும். காதர் மஸ்தான் இந்து விவகார அமைச்சுப் பதவியை ஒப்புக்கொள்ளக்கூடது.

    ReplyDelete
  4. எது எதற்கு அமைச்சு பதவி என்று இல்லாது போய்விட்டது அனியாய சம்பளம் மக்கள் பணம் வீண் விரயம்

    ReplyDelete

Powered by Blogger.