Header Ads



சிலர் பேஸ்புக் ஊடாக, கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக்கி விட்டனர் - மகிந்த

சிலர் பேஸ்புக் ஊடாக கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்து, அவர் அதனை செய்தார், இதனை செய்தார் என பொய்களை கூறி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன திடீரென்றே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட போகிறார் என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால் நாம் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.

மக்களின் நிலைப்பாட்டையே நான் கூறுகிறேன். மக்கள் விருப்பத்திற்கு அமையவே ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.