ஹிட்லரை போன்ற ஒரு ஆட்சி, நிறுவப்பட வேண்டுமென்பதில் தவறில்லை - மகிந்த
நாட்டின் நிலை தொடர்பில் ஒரு தேரர் கருத்து தெரிவிக்கும்போது, அரசாங்கம் சீற்றமடையக் கூடாதென மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
தேரரின் கருத்து தவறாக பொருள் படுத்தப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கொட்டிபிட்டியே ராஹூல தேரர், ஹிட்லரை போன்ற ஒரு ஆட்சி நிறுவப்பட வேண்டும் என வேன்டருவே உபாளி தேரர் வெளியிட்ட கருத்தில் தவறான பொருள் இல்லையெனவும், சிறந்த நிர்வாகத்தையே அவர் பொருட்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
Post a Comment