"முஸ்லிம்கள் உணர்ந்துவிட்டார்கள்" ஜனாதிபதியாக சகல சமூகங்களினதும் ஆதரவு வேண்டும்
எவராவது ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டுமாயின் அவர் அனைத்து சமூகங்களினதும் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாம் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரானவர்கள் என பொய்ப் பிராசாரம் செய்யப்பட்டது. எம்முடன் இருந்தவர்களாலே பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டது. இன்று முஸ்லிம்கள் அது பொய்ப் பிரசாரம் என்பதை உணர்ந்துவிட்டார்கள்.
எம்முடன் இருந்தவர்களே இவ்வாறான பொய் பிரசாரங்களைச் செய்து விட்டு நாம் தோற்கடிக்கப்பட்டதும் எம்மை விட்டும் வெளியேறி எமக்கு எதிரான கட்சியுடன் சேர்ந்து கொண்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது; "எமது ஆட்சிக்காலத்தில் சிறுபான்மை இனத்துக்கு நாம் செய்த சேவைகளை எடுத்துக்கூற எவரும் முன்வரவில்லை. முஸ்லிம்கள் தமது சொந்த கிராமங்களில் இன்று சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சுதந்திரம் எமது அரசாங்கத்தினாலே அவர்களுக்குக் கிடைத்தது. நாங்கள் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்களும், முஸ்லிம்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தினோம்.
தமிழ் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்தும் பலாத்காரமாக வெளியேற்றினர். நாம் அவர்களை கிண்ணியா போன்ற பகுதிகளில் மீள்குடியேற்றினோம். இன்று மக்கள் யுத்தகாலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் இடையிலான வேறுபாடுகளை உணர்ந்துள்ளனர்.
அவர்களது பிரதேசங்களில் அபிவிருத்தி இடம்பெறவில்லை. அவர்களது அரசியல்வாதிகள் பிரிவினையையே இலக்காகக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளரை நான் மாத்திரம் தனித்து தீர்மானிக்கமாட்டேன். நான் நாடெங்கும் விஜயம் செய்வேன். மக்கள் அபிப்பிராயங்களைக் கேட்டறிவேன். கூட்டு எதிரணியும் உள்ளது. உரிய நேரத்தில் நாங்கள் ஒன்றுகூடி ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வோம்" என்றார்.
-Vidivelli
We in Sinhala dominated area lived happily with coexistence with them. We were chairman of hundreds 0f local bodies in those areas. Our traditional business we did .Now its changed.
ReplyDeleteDuring MRs period only his supporters with prrvailed government assistance destroyed made Muslims as second class citizens.
Now some Muslims forgetting past intentionally for their own personnnel benefits trying to support them