Header Ads



"முஸ்­லிம்கள் உணர்ந்­து­விட்­டார்கள்" ஜனா­தி­ப­தி­யாக சகல சமூ­கங்­க­ளி­னதும் ஆத­ரவு வேண்டும்

எவ­ரா­வது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்க வேண்­டு­மாயின் அவர் அனைத்து சமூ­கங்­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது நாம் சிறு­பான்மை சமூ­கத்­துக்கு எதி­ரா­ன­வர்கள் என பொய்ப் பிரா­சாரம் செய்­யப்­பட்­டது. எம்­முடன் இருந்­த­வர்­க­ளாலே பொய்ப் பிர­சாரம் செய்­யப்­பட்­டது. இன்று முஸ்­லிம்கள் அது பொய்ப் பிர­சாரம் என்­பதை உணர்ந்­து­விட்­டார்கள்.

எம்­முடன் இருந்­த­வர்­களே இவ்­வா­றான பொய் பிர­சா­ரங்­களைச் செய்து விட்டு நாம்  தோற்­க­டிக்­கப்­பட்­டதும் எம்மை விட்டும் வெளி­யேறி எமக்கு எதி­ரான கட்­சி­யுடன் சேர்ந்து கொண்­டார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

ஆங்­கில ஊட­க­மொன்­றுக்கு வழங்­கி­யுள்ள நேர்­கா­ணலின் போதே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது; "எமது ஆட்­சிக்­கா­லத்தில் சிறு­பான்மை இனத்­துக்கு நாம் செய்த சேவை­களை எடுத்­துக்­கூற எவரும் முன்­வ­ர­வில்லை. முஸ்­லிம்கள் தமது சொந்த கிரா­மங்­களில் இன்று சுதந்­தி­ர­மாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்த சுதந்­திரம் எமது அர­சாங்­கத்­தி­னாலே அவர்­க­ளுக்குக் கிடைத்­தது. நாங்கள் பயங்­க­ர­வா­தத்தைத் தோற்­க­டித்து வடக்­கிலும், கிழக்­கிலும் தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் சுதந்­தி­ர­மாக வாழக்­கூ­டிய சூழலை ஏற்­ப­டுத்­தினோம்.

தமிழ் விடு­தலைப் புலிகள் முஸ்­லிம்­களை அவர்­க­ளது சொந்த இடங்­க­ளி­லி­ருந்தும் பலாத்­கா­ர­மாக வெளி­யேற்­றினர். நாம் அவர்­களை கிண்­ணியா போன்ற பகு­தி­களில் மீள்­கு­டி­யேற்­றினோம். இன்று மக்கள் யுத்­த­கா­லத்­துக்கும் இன்­றைய காலத்­துக்கும் இடை­யி­லான வேறு­பா­டு­களை உணர்ந்­துள்­ளனர்.

அவர்­க­ளது பிர­தே­சங்­களில் அபி­வி­ருத்தி இடம்­பெ­ற­வில்லை. அவர்­க­ளது அர­சி­யல்­வா­திகள் பிரி­வி­னை­யையே இலக்­காகக் கொண்­டுள்­ளனர்.

ஜனா­தி­பதி வேட்பாளரை நான் மாத்திரம் தனித்து தீர்மானிக்கமாட்டேன். நான் நாடெங்கும் விஜயம் செய்வேன். மக்கள் அபிப்பிராயங்களைக் கேட்டறிவேன். கூட்டு எதிரணியும் உள்ளது. உரிய நேரத்தில் நாங்கள் ஒன்றுகூடி ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வோம்" என்றார்.
-Vidivelli

1 comment:

  1. We in Sinhala dominated area lived happily with coexistence with them. We were chairman of hundreds 0f local bodies in those areas. Our traditional business we did .Now its changed.
    During MRs period only his supporters with prrvailed government assistance destroyed made Muslims as second class citizens.
    Now some Muslims forgetting past intentionally for their own personnnel benefits trying to support them

    ReplyDelete

Powered by Blogger.