Header Ads



"பசு மாட்டையும், எருமை மாட்டையும் இழுத்துச் செல்வது போன்று"

பசு மாட்டையும் எருமை மாட்டையும் ஒன்றாக இழுத்துச் செல்வது போன்றது தான் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சியமைப்பது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிண்டலடித்துள்ளார்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ. பண்டாரநாயக்கவின் 100 ஆவது பிறந்த நாள் நிகழ்வு கம்பஹா இம்புல்கொட சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் நினைவுச் சிலைக்கு அருகில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்திலுள்ளவர்கள் தான் உள்ளிட்டவர்களுக்கு திருடன் திருடன் என்று குற்றம் சுமத்தியபோதிலும், தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கே திருடன் திருடன் என்று கூறும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும்.

இன்று பசு மாட்டையும் எருமை மாட்டையும் ஒன்றாக இழுத்துச் செல்வது போன்றது தான் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சியமைப்பது என்பது பொருத்தமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.