Header Ads



தெற்காசியாவின் மிக உயரமான கட்டடத்தை, கொழும்பில் அமைக்கிறது சீன நிறுவனம்


தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது.  இந்தக் கட்டடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக இந்தக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

கொழும்பு 1, ட்ரான்ஸ்வேக்ஸ் சதுக்கத்தில் மூன்று கோபுரங்களைக் கொண்ட இந்தக் கட்டடம் கட்டப்படவுள்ளது.

THE ONE என்று அழைக்கப்படவுள்ள இந்தக் கட்ட்டம், பணியகங்கள், வதிவிடங்கள், ஆடம்பர சில்லறை வணிக வளாகம், பல மாடி வாகனத் தரிப்பிடம், மண்டபம், உலங்குவானூர்தி இறங்குதளம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.


1 comment:

  1. உயர உயர பறந்தாலும் வான் குருவி பருந்தாகாது. நீங்கள் சிங்கப்பூர் துபாய் போல வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டினாலும் பிரயோசனம் இல்லை நாடு மக்களின் பொருளாதாரத்தை வளர்க்காமல். சீரான வளர்ச்சி தான் அபிவிருத்தி. ஆங்காங்கே வீங்கி இருந்தால் அது புற்று நோய். இந்த கட்டிடங்களால் இறுதியில் சீனர்களும் இந்தியர்களும் தான் நன்மை பெறுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.