Header Ads



மைத்திரி தலைமை தாங்கும் நாட்டிற்கு, இப்படியும் ஒரு அவமானம்

பிளாஸ்டிக், பொலிதீன் தடை என்பவற்றுக்கு எதிராக ஊர்வலம் சென்ற ஒரே நாடு இலங்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (04) கேகாலையில் தெரிவித்துள்ளார்.

கேகாலை சுதந்திர மாவத்தை வளாகத்தில் இடம்பெற்ற கேகாலை மாவட்ட சுற்றாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

தான் 2006 ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சராக இருந்தபோது அறிமுகம்செய்த பொலிதீன் சம்பந்தமான கொள்கையே கடந்த வருடத்தில் நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது.

இத்திட்டம் 2006 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது. இதனை நடைமுறைப்படுத்த முடியாமல் பிளாஸ்டிக், பொலிதீன் உற்பத்தியாளர்கள் தமது ஆதரவாளர்களை வீதியில் இறக்கினர் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.