Header Ads



மாற்று மதத்தவர்களை சாடாதீர், பௌத்தர்களே தொல்பொருள் பிரதேசங்களை அழிக்கின்றனர் - மஹிந்த

நாட்டில் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் தொல்­பொ­ருட்கள் காணப்­ப­டு­கின்­றன. இந்தப் பிர­தே­சங்­க­ளி­லெல்லாம் எமது அர­சர்கள் காலடி வைத்­துள்­ளார்கள். இந்தத் தொல்­பொ­ருட்கள் இன்று அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவற்றை ஏனையமதத்­த­வர்கள் அழிக்­க­வில்லை. பௌத்­தர்கள் என்று கூறிக்­கொள்ளும் ஒவ்வொரு நாளும் புத்த தர்­மத்தைப் பேசும், பௌத்த தர்­மத்தைப் பாது­காப்­ப­தாகக் கூறிக்­கொள்­ப­வர்­களே இதனைச் செய்­கி­றார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

வலஸ்­முல்­லையில் அண்­மையில் நடை­பெற்ற சமய நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது; “இன்று நாட்டில் புதை­பொ­ருட்­களை அழித்து அப்­பி­ர­தே­சங்­களில் வீடுகள் நிர்­மா­ணிக்­கி­றார்கள். இதனை நான் கண்­ணுற்றேன். 20 வீடுகள் நிர்­மா­ணிப்­ப­தற்கு 10 ஏக்கர் நிலத்தை சுத்­தி­க­ரிப்பு செய்­கி­றார்கள். பெகோ இயந்­தி­ரத்­தினால் டோசர் பண்­ணு­கி­றார்கள். அம்­பா­றையில் முழு­மை­யாக டோசர் பண்­ணி­யி­ருக்­கி­றார்கள். இவற்றை ஏனைய இன மக்கள் செய்­ய­வில்லை. பௌத்­தர்கள் என்று கூறிக்­கொள்­ப­வர்­களே இதனைச் செய்­கி­றார்கள். இதைப்­பற்றி கவ­னத்தில்  கொள்­ளாது சிலர் மௌன­மாக இருக்­கி­றார்கள். வலஸ்­முல்லைப் பகு­தி­யிலும் தொல்­பொ­ரு­ளுக்கு இந்த நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது. அநு­ரா­த­பு­ரத்­திலும் இவ்­வாறே தொல்­பொ­ருட்­களை சிதை­வுக்­குள்­ளாக்கி விட்டுச் சென்­றி­ருக்­கி­றார்கள்.

இப்­போது அற­நெறிப் பாட­சா­லை­யொன்­றினை அமைப்­ப­தற்கு அனு­மதி பெற­வேண்டும். அனு­மதி பெறச் சென்றால், அற­நெறிப் பாட­சா­லைக்கு எத்­தனை மாண­வர்கள் வரு­கி­றார்கள். பாட­சாலை அமைக்­க­வுள்ள காணியின் அளவு போன்ற விப­ரங்­களை கேட்­கி­றார்கள். அதன் பின்பு அதற்­கென நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் கமிட்­டி­யிடம் செல்­ல­வேண்டும்.

அந்தக் கமிட்­டியில் முஸ்லிம் சமயத் தலை­வர்கள், பௌத்த குருமார் கத்­தோ­லிக்க இந்து குருமார் என அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள சமயத் தலை­வர்கள் அடங்­கி­யுள்­ளார்கள். இவர்­களில் எவ­ரா­வது எதிர்ப்பு தெரி­வித்தால் மாவட்ட காரி­யா­ல­யத்­துக்கு செல்ல வேண்டும். அங்கு மாவட்ட ரீதி­யி­லான மதத்­த­லை­வர்கள் அங்கம் பெற்­றி­ருக்­கி­றா­ர்கள். அங்கும் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்டால் அதனைவிட மேலான இடத்துக்குச் செல்லவேண்டும். இதனால் அறநெறிப் பாடசாலையொன்று அமைப்பதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளப் பல வருடங்கள் செல்லலாம்” என்றார்.

நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக் ஷவும் கலந்து கொண்டார்.  
-Vidivelli

No comments

Powered by Blogger.