Header Ads



துருக்கிக்குள் நுழைய முற்பட்ட, 8 இலங்கையர் கைது

துருக்கி நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட, இலங்கைப் பிரஜைகள் எட்டு பேர், ஜோர்ஜியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த எட்டுப் பேரும், எஜாரா எல்லையில் வைத்து ஜோர்ஜியா பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், ஜோர்ஜியா ஊடாக துருக்கிக்குள் நுழைய முற்பட்டுள்ளனர் என, அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஜோர்ஜியா குற்றத்தடுப்புச் சட்டத்துக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜியா நாட்டின் சட்டத்தின் பிரகாரம், இவ்வாறான குற்றங்களுக்காக 4 அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டைனை வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.