Header Ads



சர்ச்சைக்குரிய நபருடன் 800 முறை பேசிய நாமல்

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனிடம் நாமல் ராஜபக்ச 800 முறை தொலைபேசியில் உரையாடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடனும் அவருக்கு தொடர்பு இருந்ததாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சத்தமாக பேசும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்றுக் கொண்ட 118 பேர் குறித்து பேசாமல் இருக்கிறார். இதன்மூலம் அலோசியஸ் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் நன்கு கவனித்திருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தொடர்பான தகவல் வெளியாகி உள்ள நிலையில், கொழும்பு அரசியல் மட்டத்தில் பரவலாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

1 comment:

  1. 800 times? Woooow, even lovers don't spend so much phone time!

    ReplyDelete

Powered by Blogger.