5 புலமைப்பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்தார்.
பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பிலான கோரிக்கை எந்தத் தரப்பினரிடமிருந்தும் விடுக்கப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித சுட்டிக்காட்டினார்.
இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் 3,25,000 சிறுவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment