Header Ads



ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 500 நாட்கள்

ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க இன்றில் இருந்து இன்னும் 500 நாட்கள் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

500 நாட்களுக்கு பின்னர் வரும் அந்த சந்தர்ப்பத்தை எவருக்கும் தவிர்க்க முடியாது. நாளை முதல் அடுத்த 499 நாட்களை கணக்கிடுவது நாட்டுக்கு முக்கியமானது.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது ஒத்திவைத்துள்ளது. மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் உறுதியளித்த போதிலும் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளார் எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.