Header Ads



பிறை கண்ட 2 சாட்சிகள் இருந்தால், வெள்ளிக்கிழமை பெருநாள் - றிஸ்வி முப்தி


நாட்டில் எங்காவது பிறை கண்டதாக இரண்டு பேர் சாட்சி சொல்வார்கள் என்றிருந்தால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) பெருநாள் எடுக்க வேண்டி ஏற்படலாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி  புனித நோன்பு ஆரம்பமானது. இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருநாள் எடுக்க வேண்டி வந்தால் பிடித்த நோன்புகள் 28 ஆகவே அமையும்.

நோன்பு 28 உடன் நிறைவடைந்தால் ஒரு நோன்பை கழாச் செய்ய வேண்டும் என்பது சன்மார்க்கச் சட்டமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளுப்பிடியில் நேற்று(08) இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கத்தின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.