Header Ads



மடவளையில் அதிரடிகாட்டிய அதிரடிப்படை - சுட்டு வீழ்தப்பட்ட 2 பாதாள குழுவினர் (படங்கள்)


கண்டி மாவட்டத்தில் மடவளை என்ற இடத்தில் விசேட அதிரடிப்படைக்கும் பாதாள உலகக் கேஷ்டி ஒன்றுக்கு மிடையே இடம் பெற்ற துப்பாக்கிச் சமரில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

வத்தேகம பொலீஸ் பிரிவில் உள்ள மடவளை தெல்தெனிய வீதியில் சனிக்கிழமை (9.6.2018) முற்பகல் 11.30 மணியளவில் இச்சமபவம் இடம் பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-

பொலீசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்துக்குறிய சொகுசு வாகனத்தை பின் தொடர்ந்து வந்து பின்னர் மடவளையில் முற்றுகையிட்டுள்ளர். மடவளை பிரதான சந்தியைக் கடந்து 150 மீட்டர் தூரத்திலுள்ள சன நடமாட்டம் குறைந்த இடத்தில் வாகனத்தில் வந்தவர்களை கைது செய்வதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது வாகனத்திலிருந்த இரு சந்தேக நபர்களும் பொலீசாரை நோக்கி துப்hக்கிப் பிரயோகம் செய்ய முயற்சித்த போது பொலீசார் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதன் காரணமாக தொடர்புடைய இரு பாதாள உலகக் கேஷ்டியைச் சேர்ந்த இருவரும் கொள்ளப்பட்டனர். பிரேதம் கட்டுகாஸ்தோட்டை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் விசாரனைக்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.

சம்பவத்தில் கொள்ளப்பட்ட இருவரும் பிரபல பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த மாகந்துர மதூஸ் என்பவரின் கையாட்கள் எனப் பொலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் இரண்டு கைத்துப்பாகிள் கைவிடப்பட்டுள்ளன. இவை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ரக ஆயும் எனப் பொலீசார் தெரிவித்தனர். வத்தேகம பொலீசார் ஆமலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  


No comments

Powered by Blogger.