வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை, முல்லைத்தீவில் மீட்பு - 2 பெண்கள் கைது
வவுனியாவில் கடந்த வியாழனன்று கடத்தப்பட்ட 8 மாத கைக்குழந்தை முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் இன்று -02 மதியம் குழந்தையை மீட்டுள்ளதுடன் குழந்தையை வைத்திருந்த இரு பெண்களையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களிடமும் பொலிஸார் தங்களது ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தை மீட்கப்பட்டதைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரால் வவுனியா பொலிஸ் நிலையம் ஊடாக குழந்தையின் தாய்க்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment