பேஸ்புக்கினால் போன 2 உயிர்கள்
இந்தியாவில் மனைவி பேஸ்புக்குக்கு அடிமையானதால் ஏற்பட்ட சண்டையில் கணவனும், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் அனூப் (28). இவர் மனைவி சவுமியா (23). தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சமூகவலைதளமான பேஸ்புக்கில் எந்நேரமும் மூழ்கியிருப்பதை சவுமியா வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் இது தொடர்பாக கணவன் மனைவியிடயே தகராறு ஏற்பட்டது.
அப்போது சவுமியாவின் சகோதரர் ரவிச்சந்திராவுக்கு போன் செய்த அனூப் நடந்த விடயங்களை கூறி சவுமியாவை அவர் வீட்டுக்கே அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து அனூப்பை சமாதானம் செய்த ரவிச்சந்திரன் காலையில் வந்து இது குறித்து நேரில் பேசுவதாக கூறினார்.
பின்னர் காலையில் அனூப் வீட்டுக்கு ரவிச்சந்திரன் வந்த போது உள்பக்கமாக பூட்டியிருந்தது.
சந்தேகமடைந்த அவர் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் வீட்டுக்கு வந்த பொலிசார் கதவை உடைத்து பார்த்தனர்.
அப்போது உள்ளே அனூப்பும், சவுமியாவும் தனித்தனியறையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்.
இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Post a Comment