Header Ads



அம்பாறை பள்ளிவாசலுக்கு 27 மில்லியன் வழங்க பிரதமர் உத்தரவு - சுற்றுநிருபத்தில் அப்படி ஒன்றுமில்லை

கடந்த பெப்­ர­வரி மாதம் அம்­பா­றையில் இடம்­பெற்ற  வன்­செ­யல்­க­ளினால் முழு­மை­யாக  சேதங்­க­ளுக்­குள்­ளான அம்­பாறை ஜும் ஆ  பள்­ளி­வா­சலின்  நஷ்டஈடு­ ம­திப்­பீட்டுத்  தொகை­யான  27 மில்­லியன் ரூபா­வையும்  தாம­தி­யாது  வழங்­கு­வ­தற்­கான  ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் புனர்­வாழ்வு  அதி­கார சபைக்கு  உத்­த­ரவு  பிறப்­பித்­துள்ளார்.

அத்­தோடு  கடந்த வருடம்  நவம்பர் மாதம்   கிந்­தோட்­டையில்  இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால்  பாதிக்­கப்­பட்ட  சொத்­துக்­க­ளுக்கு ஏன் இது­வரை  நஷ்­ட­ஈ­டுகள்  வழங்­கப்­ப­ட­வில்லை எனவும்  புனர்­வாழ்வு  அதி­கா­ர­சபை  அதி­கா­ரி­க­ளிடம்  கேள்வி   எழுப்­பிய  பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க,  கிந்­தோட்டை  நஷ்டஈடு­க­ளையும்  வழங்­கு­வ­தற்­கான  ஏற்­பா­டு­களை  மேற்­கொள்­ளு­மாறு  வேண்­டிக்­கொண்டார்

நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில்  பிர­தமர்  தலை­மையில்  கண்டி  வன்­செ­யல்­க­ளினால்  பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளுக்­கான நஷ்ட ஈடுகள் வழங்கும்  நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்றம் தொடர்­பாக ஆராயும் கூட்­ட­மொன்று நடை­பெற்­றது.

இக்­கூட்­டத்தில்  அமைச்­சர்கள்   ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும்  மலிக் சம­ர­விக்­ரம உட்­பட  பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர். புனர்­வாழ்வு அமைச்சு மற்றும்  புனர்­வாழ்வு   அதி­கா­ர­ச­பையின்  அதி­கா­ரி­களும்  பங்கு கொண்­டி­ருந்­தனர்.

இக்­கூட்­டத்தின் போது  அம்­பா­றையில்  இடம் பெற்ற  வன் செயல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் மற்றும்  சொத்­துக்­க­ளுக்கு நஷ்டஈடு வழங்­கு­வது   தாம­த­மா­கின்­றமை தொடர்பில்  அமைச்சர்  ரவூப் ஹக்கீம்  கேள்­வி­யெ­ழுப்­பினார்.

 இச்­சந்­தர்ப்­பத்தில்  அம்­பாறை  ஜும் ஆ பள்­ளி­வா­சலின்  நஷ்­ட­ஈடு  மதிப்­பீடு  27 மில்­லியன்  ரூபாய்கள்  என தெரி­விக்­கப்­பட்­டது. இந்த நஷ்ட ஈட்­டினை  வழங்­கு­வ­தற்கு  அமைச்­ச­ரவைப்  பத்­திரம் ஒன்­றினைத்  தயா­ரித்து  தாம­த­மின்றி  சமர்ப்­பித்து  அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் பிர­தமர் புனர்­வாழ்வு  அதி­கார சபை  அதி­கா­ரி­களை  வேண்­டிக்­கொண்டார். 

இது­தொ­டர்பில்  புனர்­வாழ்வு அமைச்சின் மேல­திகப்  பணிப்­பாளர்  எஸ்.எம்.பதுர்­தீனைத்  தொடர்பு  கொண்டு வின­வி­ய­போது, கண்டி  வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளுக்கு  நஷ்ட ஈடு வழங்­கு­மாறு  பிர­த­ம­ரினால்  உத்­த­ரவு  வழங்­கப்­பட்­டி­ருந்­தது.  ஆனால் அம்­பாறை  மற்றும்  கிந்­தோட்டை   வன்­செ­யல்­க­ளினால்  பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளுக்கு நஷ்ட  ஈடு எவ்­வாறு  வழங்­கப்­பட  வேண்­டு­மென  தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

1987 ஆம் ஆண்டின்  சுற்று நிரு­பத்­தின்­படி வன் செயல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­களின்  நஷ்ட  மதிப்­பீட்டில்  20 வீதமே   நஷ்ட  ஈடாக வழங்க முடியும்.  அத்­தோடு  பள்­ளி­வா­சல்­க­ளுக்கு  நஷ்ட ஈடாக  ஒரு மில்­லியன் ரூபா­வுக்கு  உட்­பட்ட  தொகையே  வழங்க முடியும்.  இவ்­வாறே  சுற்று நிருபம்  தெரி­விக்­கி­றது. இதன் கார­ண­மா­கவே  அம்­பாறை, கிந்­தோட்டை நஷ்ட ஈடுகள்  வழங்­கு­வதில் தாமதம் ஏற்­பட்­டது.

அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட ஜும்ஆ பள்­ளி­வாசல்  உட்­பட  மற்றும் சொத்­துக்­க­ளுக்கு  நஷ்ட  ஈட்­டினைப் பெற்­றுக்­கொ­டுக்க  அமைச்­ச­ரவைப்  பத்­தி­ரத்தை தயார் செய்­யும்­படி பிர­தமர்  பணித்­தி­ருக்­கிறார். தற்­போது  அதற்­கான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அடுத்த  வார­ம­ளவில்  அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க முடியும் என்றார். 

கிந்தோட்டையில்  2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற வன்செயல்களினால்  142 சொத்துக்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  2018 பெப்ரவரி மாதம் அம்பாறையில் இடம் பெற்ற வன் செயல்களினால் ஜும் ஆ பள்ளிவாசல்  ஒன்று உட்பட 13 சொத்துகள்  பாதிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

No comments

Powered by Blogger.