Header Ads



மைத்திரிபாலவை 2020 இல் மீளவும், ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவோம் - துமிந்த

எதிர்வரும் 2020ம் அண்டில் மீளவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவோம் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி துண்டு துண்டாக பிளவடையும் என சிலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனினும் இந்த எதிர்ப்பார்ப்பு எவ்விதத்திலும் மெய்ப்பிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி  செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.