Header Ads



புலிகளின் 1500 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது

எல்.ரி.ரி.ஈ. அமைப்புக்குச் சொந்தமான 1500 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் சொத்துக்கள் என்பன அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு இதுவரையில் இவ்வளவு சொத்துக்களைத் தான் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
புலிகளின்  இந்த சொத்துக்களுக்குப் புறம்பாக பொருட்களும், சொத்துக்களும் இன்னும் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பினும், அவற்றை ஊர்ஜீதப்படுத்திக் கொள்ள முடியாதுள்ளதாவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்களில், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் காணப்பட்ட காணி, வெள்ளவத்தையிலுள்ள சுகபோக வீட்டுத் தொகுதி, கொழும்பு ஜெம்பட்டா வீதியிலுள்ள நவீன அச்சகம், கருவாத்தோட்டத்திலுள்ள காணி, பல படகுகள் உட்பட வங்கிக் கணக்குகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.  

No comments

Powered by Blogger.