Header Ads



RSS தீவிரவாதிகள் இலங்கைவந்து, பொதுபலசேனாவுடன் ஆலோசனை - இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்தா..?

முஸ்லிம் சமு­தாயம் இந்­திய, இலங்கை மண்­ணிலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள், கடும்­போக்கு அமைப்­புக்­களின் கூட்டுச் செயற்­பா­டுகள், மத்­திய அர­சாங்­கங்­களின் கவ­னத்தில் கொள்­ளாத நிலை­மைகள், சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்­கி­டையில் குறிப்­பாக தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு இடையில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டிய நல்­லு­ற­வுகள், தொடர்­புகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து விடி­வெள்­ளிக்கு வழங்­கிய விசேட செவ்வி வரு­மாறு :

Q தமி­ழ­கத்தில் உள்ள தமிழ் – முஸ்லிம் உற­வினை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு இலங்கை சிறு­பான்மை தேசிய இனங்­க­ளுக்கு நீங்கள் கூற­வி­ழை­வது என்ன?

பதில்:- 2009 ஆம் ஆண்டு மிகப்­பெரும் துய­ரத்­தினைத் தந்­தி­ருந்த சம்­ப­வங்கள் நிகழ்ந்த பின்னர் நான் லண்­ட­னுக்குச் சென்­றி­ருந்தேன். அங்­குள்ள ஈழத்­த­மி­ழர்­களை சந்­தித்துப் பேச்­சுக்­களை நடத்­தினேன். அவர்­களின் நிலைப்­பா­டு­களை கேட்டு அறிந்து கொண்டேன். அதே­போன்று தமி­ழ­கத்தில் உள்ள ஈழத்­த­மி­ழர்­களின் நிலை­மை­க­ளையும் கேட்­ட­றிந்து கொண்­டி­ருந்தேன். இலங்­கையில் உள்ள தமி­ழர்­களின் நிலை­மை­க­ளையும் நிலைப்­பா­டு­க­ளையும் பெற்­றுக்­கொண்டேன். அதன் பின்னர் இலங்­கையில் உள்ள முஸ்லிம் சமூகத்­து­டனும் தொடர்ச்­சி­யாக தொடர்­பு­களை பேணி வந்தேன். இவ்­வா­றான நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய மாநாட்டில் பங்­கேற்­ப­தற்­காக நான் அங்கு வருகை தந்­தி­ருந்தேன். அச்­ச­ம­யத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாட் பதி­யுதீன், கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக இருந்த ஹாபீஸ் நஸீர் மற்றும் தமிழ்த் தேசிய தலை­வர்கள் உள்­ளிட்­ட­வர்­களை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தேன். அவை ஆரோக்­கி­ய­மா­ன­தா­கவே இருந்­தன.

இலங்­கையில் காணப்­பட்ட அசா­தா­ரண காலப்­ப­கு­தியில் நடை­பெற்ற கசப்­பான அனு­ப­வங்­களை மையப்­ப­டுத்தி யார் அதில் தவ­றி­ழைத்­தார்கள். அதற்­கான கார­ணங்கள் என்ன போன்ற பகுப்­பாய்­வு­க­ளுக்கு முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும்  செல்­லாது எதிர்­கா­லத்தில் எவ்­வாறு இணைந்து செயற்­ப­டு­வது என்­பது பற்றி சிந்­திக்க வேண்­டிய தருணம் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய சூழலில் சிங்­கள பேரி­ன­வா­தமும், பௌத்த மத­வா­தமும் உச்­ச­மாக செயற்­பட ஆரம்­பித்­துள்­ளன.

குறிப்­பாக கண்­டி­யிலும், அம்­பா­றை­யிலும் அண்­மித்த தினங்­களில் நிகழ்ந்த சம்­ப­வங்­களை கவ­னத்தில் கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. திட்­ட­மிட்ட வகையில் முஸ்­லிம்­களை தாக்­கு­கின்ற சம்­ப­வங்­க­ளா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது. விசே­ட­மாக அம்­பாறை சம்­ப­வத்­தினை எடுத்­துக்­கொண்டால் இலங்­கையில் முஸ்­லிம்கள் பெரும்­பா­லான உண­வ­கங்­களை நடத்­து­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் உண­வுச்­சு­வையால் அங்கு மக்கள் அதி­க­மாக கூடு­வதை பொறுத்­துக்­கொள்ள முடி­யா­த­வர்கள் முஸ்­லிம் உண­வ­கங்­களில் உள்ள உண­வு­களில் ஆண்மைக் குறை­பாட்டு மாத்­தி­ரை­களை உண­வு­களில் கலக்­கின்­றார்கள் என்ற திட்­ட­மிட்ட பொய்ப் பிர­சா­ரத்­தினை மேற்­கொண்­டுள்­ளார்கள்.
அதே­நேரம், கண்­டியில் நடை­பெற்ற சம்­ப­வத்தை கவ­னத்தில் கொள்ளும் போது உயி­ரி­ழப்­புக்கள் இன்றி சொத்­துக்­களை அழிக்கும் ஒரு வியூ­கத்­து­டனே அந்த சம்­ப­வங்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. அதில் பெண்கள் கூட சம்­பந்­தப்­பட்­டுள்­ளார்கள் என்றால் அவர்கள் எவ்­வ­ளவு தூரம் பயிற்சி பெற்­றுள்­ளார்கள் என்­பதை உணர்ந்துகொள்ள வேண்­டி­யுள்­ளது.

இவ்­வா­றான ஒரு தரு­ணத்தில் அதனை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைக்குள் சிறு­பான்­மை­யின சமூ­கங்­க­ளான தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தள்­ளப்­பட்­டுள்­ளனர். ஆகவே இந்த விட­யத்தல் இரு சமூகத்­தி­ன­ருமே இணைந்து ஒரு­மித்த நிலைப்­பாட்­டினை எடுப்­பது காலத்தின் கட்­டா­ய­மா­க­வுள்­ளது.
மேலும் சிறு­பான்மை இனத்­த­வர்­களை எவ்­வாறு தாக்­க­மு­டியும் என்­ப­தற்­கான வியூ­கத்­தினை இந்­தி­யாவில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ், இலங்­கையில் இயங்கும் பொது­ப­ல­சேனா, மியன்­மாரில் உள்ள 969 இயக்கம் ஆகி­யவை கூட்­டாக இணைந்து அமைக்­கின்­றன.
அவர்கள் தீட்­டிய சதித்திட்­டத்தின் வெளிப்­பா­டா­கவே மேற்­படி வன்­மு­றை­களைப் பார்க்க வேண்­டி­யுள்­ளது. இந்­தி­யாவை எடுத்­துக்­கொண்டால் மத்­திய அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்­பா­னது இன, மத, மொழி­வா­ரி­யான சிறு­பான்மை இனத்­த­வர்­களை தாக்­கு­வ­தற்கு எத்­த­கைய வழி­மு­றை­களை கையாள்­கின்­றார்­களோ அதே­போன்று தான் இலங்­கையில் பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புக்­களும் செயற்­பட்டு வரு­கின்­றன.

இலங்­கையில் நடை­பெற்ற ஈழப்­போ­ரா­னது சாதி, மதத்­தினைக் கடந்து ஒரு இன விடு­த­லைக்­காக நடை­பெற்­றது. அந்­தப்போர் நிறை­வுக்கு வந்த பின்­ன­ரான சூழலில் தற்­போது மிகப்­பெ­ரிய இன­வெ­றிக்­கு­ழுக்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. ஏற்­க­னவே பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புக்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில் தமிழர், முஸ்லிம் தரப்­புக்­க­ளிலும் இன­வாதக் குழுக்­களை உரு­வாக்­கு­வதை திட்­ட­மாக கொண்டு முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றன. இது அபா­ய­க­ர­மா­னது. இது இனங்­க­ளுக்கு இடையில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வழி­வ­குத்து விடும். ஆகவே இந்த அபா­யத்­தி­லி­ருந்து மீண்­டு­வ­ருவது காலத்தின் கட்­டா­ய­மா­கின்­றது.

கிழக்கு மாகாண முஸ்­லிம்­க­ளுக்கு கோரிக்­கைகள், எதிர்­பார்ப்­புக்கள் இருக்­கின்­றன. அதே­போன்று வட­மா­காண தமி­ழர்­க­ளுக்கு கோரிக்­கைகள், எதிர்­பார்ப்­புக்கள் இருக்­கின்­றன. ஆகவே கோரிக்­கைகள், எதிர்­பார்ப்­புக்கள் சம்­பந்­த­மாக இரண்டு தரப்­பி­னரும் ஒரு வட்­ட­மே­சையில் அமர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்த வேண்டும். அவ்­வாறு பேச்­சு­வார்த்தை நடத்தி இறுதி முடி­வுக்கு வர­வேண்டும்.
தற்­போ­தைய சூழலில் இரு சிறு­பான்மை சமூ­கத்­தி­னதும் வாழ்­வி­யலே கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது. ஆகவே வாழ்க்­கையை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்டால் தான் உரி­மைகள் தொடர்பில் பேச முடியும். எனவே அதற்­கு­ரிய திட்­ட­மி­டலை கூட்­டாக மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

Q ஆர்.எஸ்.எஸ், பொது­ப­ல­சேனா, 969 ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் குணாம்ச ரீதி­யான தொடர்­பு­களை தாண்டி உற­வுகள் உள்­ளன என்­கின்­றீர்­களா?

பதில்:- ஆர்.எஸ்.எஸ்,  பொது­ப­ல­சேனா மற்றும் 969 அமைப்பு ஆகியவற்­றுக்கு இடையில் சிந்­தனை ரீதி­யான தொடர்­புகள் மட்­டு­ம் காணப்­ப­ட­வில்லை. ஆர்.எஸ்.எஸ். சேர்ந்த பிர­மு­கர்கள் இலங்­கைக்கு சென்று பொது­ப­ல­சேனா போன்ற கடும்­போக்கு அமைப்­புக்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்­துள்­ளார்கள். எவ்­வா­றான வியூ­கத்­தினை அமைத்து செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பி­லான அனைத்து வித­மான பயிற்­சி­க­ளையும் அளித்­துள்­ளார்கள். இது மட்­டு­மல்ல, தமி­ழர்­க­ளுக்கு மத்­தி­யிலும் தமது வியூ­கத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்­காக சில குழுக்­களை அமைத்­துள்­ளார்கள் என்­பது யதார்த்­த­மாகும். 

Q இலங்­கையில் உள்ள தமிழ், முஸ்லிம் உற­வினை பலப்­ப­டுத்­து­வதில் உங்­க­ளது வகி­பாகம் என்­ன­வாக இருக்கும்?

பதில்:-  இலங்­கையில் உள்ள முஸ்லிம் தலை­வர்கள் அனை­வ­ரையும் தமி­ழ­கத்­திற்கு அழைப்­ப­தற்கு திட்­ட­மிட்டு வரு­கின்றோம். கடந்த கால கசப்­பு­ணர்­வு­களை மறந்து தமி­ழர்­க­ளுடன் இணைந்து எதிர்­கா­லத்தில் பய­ணிக்கும் முக­மாக தமி­ழ­கத்தில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்­புக்கள், கட்­சிகள் , முஸ்லிம் கட்­சிகள் என அனை­வ­ரையும் உள்­ள­டக்­கிய ஒரு பெரும் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொள்­வ­தற்கு முயற்­சி­களை எடுத்து வரு­கின்றோம். இது சாத்­தி­ய­மா­கின்­ற­போது பல்­வேறு மாற்­றங்­களை இலங்­கையில் காண­மு­டியும் என்­பது எமது எதிர்­பார்ப்­பா­க­வுள்­ளது. 

Q இந்­தியா உட்­பட உல­க­ளா­விய ரீதியில் வேக­மாகப் பர­வி­வரும் முஸ்­லிம்கள் அனை­வரும் தீவி­ர­வா­திகள் என்ற பொதுப்­படை சிந்­த­னையை கட்­டுப்­ப­டுத்­து­வதில் முஸ்­லிம்­களின் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைய வேண்டும்?

பதில்:- முகத்தில் தாடி­வைத்து, தொப்பி அணிந்­த­வர்கள் அனை­வரும் பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­த­ிரிக்­கின்ற நிலைமை தான் தற்­போது உல­க­ளா­விய ரீதியில் உள்­ளது. அதிலும் இந்­தி­யாவில் அந்த தன்மை அதி­க­மா­கவே உள்­ளது. ஆகவே ஆசிய முஸ்­லிம்­க­ளுக்கு என்னால் வழங்கக் கூடிய செய்­தி­யாக இதனைக் கொள்­ள­மு­டியும். அதா­வது, நாங்கள் பன்­மு­கத்­தன்மை கொண்ட சமூ­கத்தில் தான் வாழு­கின்றோம் என்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அத்­துடன் முஸ்­லிம்கள் என்றால் பயங்­க­ர­வா­திகள் என்ற ஏனைய தரப்­புக்­களின் மன­நி­லையை மாற்றும் வகையில் முற்­போக்­குடன் செயற்­பட வேண்டும். அதா­வது, ஏனைய சமூ­கத்­துடன் வேறு­ப­டக்­கூ­டிய விட­யங்கள் குறை­வா­கவும் ஒன்­று­ப­டக்­கூ­டிய விட­யங்கள் அதி­கமாகவும் இருக்­கின்ற நிலையில் அதனை புரிந்து அந்­தந்த சமூ­கங்­க­ளுடன் சகோ­த­ரத்­து­வத்­தினை ஏற்­ப­டுத்தக் கற்­றுக்­கொள்ள வேண்டும். அந்த அடிப்­ப­டையில் நாம் செயற்­பட வேண்­டி­யுள்­ளது.

இந்த விட­யத்தில் ஒரு உதா­ர­ணத்­தினைக் கூறு­கின்றேன். 1995 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு முஸ்லிம் முன்­னேற்­றக்­க­ழகம் என்ற அமைப்­பினை உரு­வாக்­கினோம். 2009 இல் தான் மனித நேய மக்கள் கட்சி என்று அர­சியல் கட்­சி­யாக மாற்­ற­ம­டைந்தோம். இடைப்­பட்ட காலத்தில் இரத்­த­தான சேவை, அம்­புலன்ஸ் சேவை போன்ற பல மனி­த­நேய செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தோம். இவ்­வா­றான நிலையில் அண்­மையில் தமி­ழ­கத்தில் வெள்ள அனர்த்தம் வந்­த­போது எமது அமைப்பு உட்­பட முஸ்லிம் தரப்­புக்கள் களத்தில் செயற்­பட்­டன.

இந்த செயற்­பா­டுகள் எவ்­வா­றான தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­ய­தென்றால், பாட­சா­லையில் தீவி­ர­வாதி ஒரு­வரின் புகைப்­ப­டத்­தினை வரை­யுங்கள் என்றால் குழந்­தைகள் தொப்­பி­யுடன் தாடி­யுடன் கூடிய ஒரு முஸ்­லி­மையே வரைந்­தார்கள். ஆனால் மேற்­படி அனர்த்­தத்தின் பின்னர் அந்த அனர்த்தம் என்ற தலைப்பில் ஓவியம் வரை­யுங்கள் என்றால் உத­விப்­பை­க­ளுடன் வெள்­ளத்தின் மத்­தியில் உள்ள வீட்­டுக்குள் செல்லும் முஸ்லிம் நபர் ஒரு­வ­ரையே வரை­கின்­றார்கள்.

அந்­த­ள­வுக்கு மன­நிலை மாற்­றத்­தினை இளம் சமூ­கத்­தினர் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வா­றான நல்­லி­ணக்கப் பணி­களே தற்­போது அவ­சி­ய­மா­க­வுள்­ளன. பயங்­க­ர­வா­தமும், தீவி­ர­வா­தமும் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்­வினை அளிக்­கப்­போ­வ­தில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு இந்த விட­யத்தில் உள்ள பொறுப்­பினை உணர்ந்து அவர்கள் செயற்­பட வேண்டும்.

-Vidivelli

5 comments:

  1. அண்ணே கருப்பு தொப்பி கராரே , ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். நீங்கள் என்ன தான் யுத்திகளை கையாண்டு தமிழ் முஸ்லிம்களை இலங்கையில் இணைக்க முயன்ன்றாலும் இலங்கை முஸ்லீம் தலைவர்கள் எப்படியும் சந்தர்ப்ப சுழலுக்கேற்றவாறு காலை வாரும் பண்புடையவர்கள். இது காலம் காலமாக வருகின்ற ஒன்று. இனிமேல் தமிழும் முஸ்லிமும் இலங்கையில் ஒட்டாது. வடகிழக்கை எவ்வாறு முஸ்லிம்களை வைத்தே இணைக்க சொல்வது என்பது பற்றி எங்களுக்கு தெரியும். மற்றது இந்தியாவிலுருந்து யாராவது எதாவது சொன்னால் இலங்கை முஸ்லிம்கள் அதை ஏற்று கொள்ளவும் மாட்டார்கள். இனியும் உங்களை பரபரபாக்க சும்மா RSS BBS என கதை அளக்குறதை விடுங்கோ. இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதுமே தொப்பி பிரட்டிகள் தான். அவர்களுடைய அண்மைய செயட்பாடான வவுனியா மற்றும் மன்னார் உள்ளுராட்சி மன்றங்களை அமைக்கவும் தமிழர்களுக்கு கிடைக்க விடாமல் பண்ணவும் அவர்கள் அமைத்த சக்கர வியூகங்களை பார்த்தோம். மிக்க சந்தோசம் நீங்கள் முஸ்லீம் எனும் போர்வையில் இலங்கை வந்தால் உங்களுடைய அடிப்படைவாதத்தையும் எதிர்ப்போம்.

    ReplyDelete
  2. சர்வதேச முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அங்கமான தமிழக முஸ்லிம்கள் ஈழ முஸ்லிம்கள் மீது வைத்திருக்கும் மதிப்பும் ஒத்துழைப்பும்  எம்மை நம்பிக்கையூட்டுகிறது.

    ReplyDelete
  3. Anusath உன்னுடைய பருப்பு எப்பவுமே வேகாது

    ReplyDelete
  4. BBS, RSS போன்றவைகளுக்கும், உல்மா, மயில், மரம் கட்சிகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை.

    இவை அனைத்தும், மதம்-யை வைத்து அரசியல் பிழைப்பு செய்கிறார்கள்.

    எனவே இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு நிகரான, அரசியல் அந்தஸ்தை அரசாங்கம் BBS, RSS க்கும் கொடுக்க வேண்டும். மினிஸடர் பதவிகளும் கொடுக்கலாம்.

    ReplyDelete
  5. பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பேட்டி யதார்த்தமானது.

    காலத்தின் தேவையை சுட்டிக் காட்டுகிறார்.

    ReplyDelete

Powered by Blogger.