Header Ads



அபாயா விவகாரத்தை ஆராய, கல்வியமைச்சினால் குழு நியமனம்


சமயம் சார்ந்த ஒரு விட­யத்தை பற்றி பல்­வேறு வகை­க­ளிலும் விமர்­சித்து அதனை இனப்­பி­ரச்­சி­னை­யாக்கி விடக் கூடாது. எமது நாட்டில் சிறு­பான்­மை­யி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான இனப்­பி­ரச்­சினை ஒன்று எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டாமல் தடுக்க  வேண்­டி­யது அவ­சியம் என்ற வகையில் பாட­சா­லை­க­ளுக்கு முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் எவ்­வாறு சமு­க­ம­ளிக்க வேண்டும் என்­பது தொடர்பில் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டாமல் தீர்வு காணப்­பட வேண்­டு­மென கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வே.இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் இஸ்லாம் மத ஆசி­ரி­யைகள் அபாயா ஆடை அணிதல் தொடர்­பாக எழுந்­துள்ள சர்ச்சை தொடர்பில் கல்வி அமைச்சின் நிலைப்­பாடு தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்,

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா கல்­லூ­ரியில் தற்­போது எழுந்­துள்ள பிரச்­சினை மத ரீதி­யான பிரச்­சினை ஆகும். எனவே இது தொடர்பில் நினைத்த மாத்­தி­ரத்தில் தீர்­வினை எடுக்க முடி­யாது. இது கல்­விசார் பிரச்­சி­னை­யா­கவும் காணப்­ப­டு­கின்­ற­மையால் இவ்­வி­டயம் தொடர்பில் ஆராய்ந்து சிறந்த தீர்­வினைக் காண்­ப­தற்­காக கல்வி அமைச்­சினால் மேல் மட்டக் குழு­வொன்றும் அமைக்­கப்­பட்­டுள்­ளது.  

எனவே அக்­கு­ழுவின் தீர்­மா­னத்தின் பின்­னரே இது தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்­மா­னத்தை குறிப்பி முடியும். அது வரையில் அவ்­வா­சி­ரி­யர்­களை தற்­கா­லிக இட­மாற்றம் செய்யத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.  மேலும் இது ஒரு மதம் சார்­பான விட­ய­மா­கை­யினால் மதத் தலை­வர்­க­ளு­டனும் இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வது சிறப்­பாக அமையும் என நாம் கருதுகின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த விடயத்தினை பற்றி விமர்சித்து அதனை எதிர்காலத்தில் இனங்களுக்கி டையிலான முறுகலாக உருவாக இடமளிக்கக் கூடாது என்றார்.

-Vidivelli

No comments

Powered by Blogger.