Header Ads



முஸ்லிம் பகுதியில் மதுபானசாலையோ, புத்தர் சிலையோ இல்லை - எஸ்.வியாழேந்திரன்

கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தனித்துவமான சிந்தனை இல்லாத காரணத்தினால் கிழக்கில் தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே அடுத்தடுத்த தலைமுறையில் இல்லாமல்போகும் நிலையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

திகுவி கல்வி சேவை நிலையம் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தாதிய பயிற்சியை பூர்த்திசெய்தவர்களுக்கான இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் மாணவர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள்,பெற்றோர் என பெருமளாவானோர் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

அண்மையில் கிழக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் தமிழ் இளைஞர்கள் எவரும் பங்கேற்றகவில்லை . முகப்புத்தகத்தில் படம் போடுவதற்கே அதிக இளைஞர்கள் முன்னிற்கின்றனர்.

இஸ்லாமிய சமூகம் தனித்துவமாக சிந்திக்கின்றது, அந்த தனித்துவங்கள் எங்களிற்கு வரவில்லை, முஸ்லிம் பகுதியில் மதுபானசாலையோ புத்தர் சிலையோ இல்லை.

இளைஞர்கள் விளையாட்டுடன் மட்டும் நின்றுவிடாது நீங்கள் சார்ந்த சமூகத்தில் முற்போக்கு சிந்தனையுடையவர்களாக செயற்படவேண்டும்.கடந்தவாரம் மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்த எட்டு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பில் பல்வேறு போதைப்பொருட்கள் பாவனைக்கு வருவதனால் இளைஞர்கள் ஆரோக்கியமற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இன்று அனேகமான இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தமது காலத்தினை நேரத்தினை செலவிடுகின்றனர்.மனிதன் மனிதனோடு பேசும் நிலைமை மாறி மனிதன் இயந்திரங்களோடு பேசி இயந்திரங்களாகவே மாறும் நிலை உருவாகிவருகின்றது.

குறித்த நிலைமை மாற்றப்படவேண்டும் முற்போக்கு சிந்தனையுடைய தலைவர்கள் உருவாகவேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

வடகிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவதற்கான எந்த திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை.கிழக்கு மாகாணத்தில் உள்ள பழம்பெரும் தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன.அதனை திறப்பதற்கான எந்த வழிவகைகளும் செய்யப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களில் 40வீதமானவர்கள் மதுபானம் வழங்கியே வெற்றிபெற்றனர். கிராமங்களில் மதுபானம் கொடுப்பதற்கு வசதிவாய்ப்பினைக்கொண்டவர் அந்த வட்டாரத்தில்வெற்றிபெற்றுவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடும் இளைஞர்கள் வேறு எதற்கும் முன்னிற்கமாட்டார்கள்.அண்மையில் மட்டக்களப்பு நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றபோது அதில் இளைஞர்கள் பங்குபற்றவில்லை.முகப்புத்தகத்தில் படம் போடுவதற்கும் எழுதுவதற்கும் ஆயிரம்பேர் வருவார்கள்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவேண்டியது.ஒரு அழிக்கப்பட்ட சமூகம்,ஒழிக்கப்பட்ட சமூகம்,காணாமல்ஆக்கப்பட்டவர்களின் சமூகம் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்துகின்றனர்.அதற்கான எமது உணர்வினை வெளிப்படுத்தமுடியாத நிலையிலேயே உள்ளனர்.

இன்றைய நிலமை சிலரது தியாகத்தினால் வந்தது.கடந்த கால ஆட்சியை மாற்றியது.இன்று அடையாள அட்டை இல்லாமல் கொழும்புசென்றுவரும் சூழ்நிலையுள்ளது.கடந்த ஆட்சிக்காலத்தில் அவ்வாறு செல்லமுடியாது.எனது மாணவர்களில் பலர் கொழும்புக்கு கடவுச்சீட்டு எடுக்கச்சென்று காணாமல்போன நிலமையும் இருந்தது.ஆனால் இன்று அந்த சூழ்நிலை மாற்றப்பட்டுள்ளது.

சிலருக்கு இன்று அடையாளஅட்டை கூட இல்லை.இன்றும் எதுவும் பேசமுடியும்.ஒரு ஜனநாயக நிலை உருவாகியுள்ளது.எனினும் இந்த நிலமை இன்னும் அதிகரிக்கப்படவேண்டும்.

அலரி மாளிகைக்குள் செல்லமுடியும்.ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்று பார்வையிடமுடியும்.ஒரு சுதந்திரமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்தகாலத்தில் இவ்வாறான சூழ்நிலையிருக்கவில்லை.வெளியில் வெள்ளைவான் எந்த நேரமும் நின்றுகொண்டிருக்கும்.எத்தனையோபேர் கடத்தப்பட்டார்கள்,கொல்லப்பட்டார்கள்.அந்த சூழல் இன்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த சூழலை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.நன்கு சிந்திக்ககூடிய,அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டக்கூடிய நல்ல இளைஞர்கள் உருவாகவேண்டும்.முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் என்ற அடிப்படையில் ஓரணியில் திரளவேண்டும்.

கிழக்கின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி இன்று எழுப்பப்படுகின்றது.தனது இனத்தினையும் தனது மக்களையும் சிந்திக்கின்ற ஒவ்வொரு இளைஞனும்தான் கிழக்கின் அடுத்த தலைவர்கள்.

 இஸ்லாமிய சமூகம் தனித்துவமாக சிந்திக்கின்றது.அந்த தனித்துவங்கள் எங்களுக்கு வரவில்லை.இன்று எந்த முஸ்லிம் பகுதியிலும் மதுபானசாலையில்லை. ஒரு புத்தி சிலையினை வைக்கமுடியாது.

கிழக்கில் தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே அடுத்தடுத்த தலைமுறையில் இல்லாமல்போகும் நிலையும் உருவாகலாம்.ஆரோக்கியமான சிந்தனைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய தனது அடுத்த தலைமுறை தொடர்பில் சிந்திக்ககூடிய,தனது இருப்பு தொடர்பில் சிந்திக்ககூடிய நல்ல இளைஞர்கள் உருவாகவேண்டும்.

தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்தில் மட்டும் வேலைசெய்யவேண்டும் என்ற சிந்தனையினை மாற்றவேண்டும்.எமது தமிழ் சமூகம் முன்னேற்றமடையாததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.தனியார் நிறுவனங்களில் தொழில் செய்யவும் விரும்பமில்லை,சுயதொழில் செய்யவும் விரும்பம் இல்லை.அரச தொழிலையே தமிழ் இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறான நிலை தொடர்ந்து நீடிக்குமானால் எமது சமூகமும் முன்னெற்றமடையாது,

4 comments:

  1. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
    (அல்குர்ஆன் : 5:90)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. சகோதரர் வியாழேந்திரா, பகவத்கீதயை பாதியில் நிறுத்தி விட்டு, புனித புர்கானின் தமிழ்ப் பிரதியை எடுத்து தலைகுனிந்து வாசித்துபார், உமக்கு இன்னும் புரியும் இஸ்லாம் என்றால் என்ன முஸ்லிம்கள் என்றால் யார் என்று. அப்போது நீர் வியாழேந்திரன் அல்ல பொன் போல் மின்னும் வெள்ளியேந்திரனாக மாறி விடுவாய் சகோதரா. உமது முஸ்லிம்கள் பற்றிய இச்சிறிய சிந்தனையை மெச்சுகுகிறேன் சகோதரா.

    ReplyDelete
  3. முட்டாள்தனமாக பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும். குரான் படித்தவர்களால்தான் இன்று உலகம் சுடுகாடாக மாறி வருகிறது . குரான் படித்த ISIS , அல் கைதா போன்றவர்கள் செய்வதை தான் தினமும் பார்க்கிறோமே .

    ReplyDelete
  4. குமார், விடிய விடிய இராமாயணம் விடிந்தெழந்தால் இராமன் சீதைக்கு தங்கை என கூறுவீர் போல் தோன்றுகிறது Bro.

    உமக்கு தெரியுமா ISIS என்பவர்கள் யார் அல்கயிதா என்பவர்கள்யார், யார் யார் அவர்களை உருவாக்கி அந்த மத்திய கிழக்கிலேயே உதித்த அந்த புனித குர்ஆனை அவமதிக்கிறார்கள் என்று. அதை முதலில் தெரிந்து கொண்டு பின்னர் பேசுங்கள் கேட் போம். முட்டாள் தனமாக உண்மை முஸ்லிம்களை உசுப்பேத்த வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.