Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியில், மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை

ஐக்கிய தேசியக் கட்சியில் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு மரியாதை கிடையாது என முன்னாள் சபாநாயகரும், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றிடம் வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

எனது மகனான கம்பஹா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீநாத் பெரேரா அரசியலில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கி நான் ஓய்வு பெறுகின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எவ்வித மரியாதையும் கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் பலரும் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்ட ஜனசவிய திட்டத்திற்கு மாற்றீடாக இன்று சமுர்த்தி வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி வங்கி மத்திய வங்கியின் கீழ் இயங்குவது ஏற்று கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. No need to stay rest of life in politics better retaire or some other jobs to do!

    ReplyDelete

Powered by Blogger.