Header Ads



கிழக்கு மாகாணத்திலிருந்து, ஹஜ் செல்வோருக்கான அறிவித்தல்


இம்முறை கிழக்கு மாகாணத்தில் இருந்து ( 2018ம் ஆண்டு) ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கான அனுமதிச்சான்றிதழ் முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அச் ஷெய்ஹ் எம்.ஆர்.எம்.மலிக் அவர்களின் வழிகாட்டலில்  பின்வரும் தினங்களில் விநியோகிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எனவே 2018ம் ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்ற திணைக்களத்தில் விண்ணப்பித்தவர்களில் 9400 இலக்க பதின் கீழ் உள்ள இலக்கங்களை உடைய ஹாஜிகள் பிணவரும் இடங்களில் தமது அனுமதிச்சான்றிதழ்களை 2018.05.12ம் திகதி சனிக்கிழமை காலை 9.00மணி தொடக்கம் 4.00 மணிவரை  பெற்றுக்கொள்ள முடியும்.

திருகோணமலை மாவட்டம்-  கிண்ணியா நாட்டுப்பள்ளிவாசல் 

மட்டக்களப்பு மாவட்டம் - முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிராந்திய காரியாலயம், காத்தான்குடி.

அம்பாறை மாவட்டம் - நிந்தவூர் மொஹிதீன் பெரிய பள்ளிவாசல். 

-ஏ.எல். ஜுனைட் நளீமி-

No comments

Powered by Blogger.