பிரதமர் பதவியை வைத்திருங்கள், தலைமையை சஜித்திடம் கொடுங்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ அதிகாரங்களை சஜித் பிரேமதாசவிடம் வழங்குமாறு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.
கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்க உள்ளனர்.
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியை ரணில் வகிக்கும் அதேவேளை, தலைமைத்துவ பதவியின் சகல அதிகாரங்களையும் சஜித்திடம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றியீட்ட வேண்டுமாயின் இவ்வாறு தலைமைத்துவ அதிகாரங்கள் சஜித்திடம் வழங்கப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.
அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது சாத்தியமற்றது எனவும், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு முனைப்பு காட்ட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச கிராம மக்களின் நம்பிக்கைக்குரியவராக திகழ்கின்றார் எனவும் அவருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் பின்வரிசை உறுப்பினர்கள், பிரதமரிடம் சுட்டிக்காட்ட உள்ளனர்.
Post a Comment