Header Ads



வெள்ளத்தின் நடுவிலும், விநியோகிக்கப்பட்ட கஞ்சி

இரத்தினபுரி கொடிகமுவ பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போதும் கஞ்சி தவராது விநியோகிக்கப்பட்டது.

கொடிகமுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் இரத்தினபுரி கொடிகமுவ பிரதேசத்தில் 550 விடுகள் பாதிக்கப்பட்டது. அதில் 260 முஸ்லிம் குடும்பங்கள் காணப்படுகின்றது. கொடிகமுவ பிரதேச மஸ்ஜிதுல் அஸீஸிய்யா மஸ்ஜிதில் மூன்றாம் மாடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்தனர். 

அதே போன்று மஸ்ஜிதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. எனினும் பள்ளி நிர்வகிகள் மற்றும் கொடிகமுவ பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் கஞ்சி தவராது விநியோகிக்கப்பட்டதுடன் தொடர்ந்து இரண்டு நாட்கள் சஹர் உணவும் இப்தார் ஏற்பாடுகளும் நடைபெற்றது. இவ் ஏற்பாடுகளுக்கு பலரும் பல்வேறு ஒத்துழைப்புக்களை தந்துதவினர் அவர்களுக்கு நிர்வாகம் நன்றி தெரிவிக்கினறது. அதேபோன்று இரத்தினபுரி கொடிகமுவ பிரதேச மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றனர் மனதால் செல்வந்தர்கள் உதவலாம்

எம் எம் எம் நுஸ்ஸாக்


No comments

Powered by Blogger.