விகாரையில் சிறுவன் மீது, பாலியல் துஷ்பிரயோகம்
13 வயது சிறுவனை, வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படும், 68 வயதுடைய நபரொருவரை கைது செய்துள்ளதாக, மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிங்குரங்கொடை பகுதியைச் சேர்ந்த நபரொருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மாதம்பை பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில், பணியில் ஈடுபட்டு வந்தவரெனவும், பொலிஸார் குறிப்பிட்டனர்.
விகாரைக்கருகில், தனியார் வகுப்புக்குச் சென்று திரும்பி வந்துக்கொண்டிருந்த குறித்த சிறுவனை, இவர் விகாரைக்குள் அழைத்து, வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளாரென, பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுவும் நல்ல செய்தி. பக்ர்ந்தமைக்கு நன்றி!
ReplyDelete