Header Ads



கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தீ

கட்டுநாயக்க விமானநிலைய கட்டடத் தொகுதி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று (09) அதிகாலை 4 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன், விமான நிலைய தீயணைப்புப் பிரிவு மற்றும் விமானப் படை தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் தீ பரவலால் விமானப் போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லையென விமானநிலையம் தெரிவித்துள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.