"ஹக்கீமிடம் ஒரு, மன்னிப்பு கேட்கிறோம்"
ஜப்னா முஸ்லிம் இணையமானது, இன்று (01) 'ஹக்கிமின் அமைச்சு கைமாறியது' என்ற தலைப்பில் ஒரு தவறான செய்தியை வெளியிட்டது.
அது தவறு என்பதால், அதனை உடனடியாக நீக்கியும் விட்டோம்.
இதற்காக ரவூப் ஹக்கீமிடம், மன்னிப்பும் கேட்கிறோம்...!
அதேவேளை ஹக்கீமின் அமைச்சில் சம்பளத்திற்கு பணியாற்றும் ஒருவர், அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக பணியாற்றும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் என பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
நாம் அறிந்தவரையில், ஹக்கீமோ, அவரது சகோதரர்களோ அல்லது முஸ்லிம் காங்கிரஸின் நிசாம் காரியப்பரோ, ஹரீஸோ, அப்துல் மஜீத் உள்ளிட்ட அக்கட்சி முக்கியஸ்தர்களோ 'ஜப்னா முஸ்லிம் இணையத்தளம்' ஹக்கீமுக்கு எதிரானது என்பதை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது எமது நம்பிக்கை.
ஜப்னா முஸ்லிம் இணையத்தளமானது, முழுக்கமுழுக்க ஊடகத் தர்மங்களை கடைபிடித்து, தொழில்சார் ஊடகத் தகைமையுடன் இயக்கப்படும் ஒரு இணையத்தளமாகும்.
நாங்கள் அமைச்சர் ஹக்கீமுக்கு எதிரானவர்கள் என, எவரேனும் நிரூபித்தால் இந்த இணையத்தை இழுத்து மூடிவிட நாங்கள் தயார்.
அதேவேளை அமைச்சர் றிசாத்தின் ஆதரவாளர்கள் சிலர், ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் ஹக்கீமின் ஆதரவுத்தளம் என போலிப் பிரச்சாரம் செய்வதையும் நாம் அறிவோம்.
ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் சுதந்திரமானது. கடைசி மூச்சுவரை அதன் சுதநதிரத் தன்மை தொடரும். இதில் எந்த எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.
அத்துடன் எமது இணையத்திற்கு என்று சில கொள்கைகள் உள்ளன. அதாவது முஸ்லிம் அரசியல்வாதிகளின் அனுப்பும் அனுதாபச் செய்திகள், பெருநாள் வாழ்த்துச்செய்திகள் மற்றும் அவர்களது அமைச்சுகள் தொடர்புடைய ஊடக அறிக்கைகள் என சகலவற்றுக்கும் எல்லாநேரங்களிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் இடம் கொடுப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..!
PLEASE GIVE RESPECT
ReplyDeleteJaffna Muslim news has been one of the good community based news paper.
ReplyDeletePlease do not politics on this issue ..
This brother has been doing it since 2007 ..
He did not ask any help of support from any politicians or anyone..
Let him His service for the community and humanity.He expects reward only from Allah ..
So; do not bring politics into into
நாங்கள் அமைச்சர் ஹக்கீமுக்கு எதிரானவர்கள் என, எவரேனும் நிரூபித்தால் இந்த இணையத்தை இழுத்து மூடிவிட நாங்கள் தயார்........... அரசியல் வாதிகளிடம் மண்டியிட வேண்டாம் , அது ...இழுக்கு பத்திரிகை களுக்கு பணம் கொடுத்து செய்தி போட்ட பல அரசியல் வாதிகள் காணாமல் போய்விட்டார்கள் , ஏமாறும் மக்கள் இருக்கும் வரைதான் , அரசியல் ?
ReplyDelete