Header Ads



மஹிந்த ராஜபக்ச, பழையவற்றை மறந்து விட்டார் - நவீன்

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலும் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்திலும் விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டன.

இவ்வாறான சந்தர்ப்பங்களை மஹிந்த ராஜபக்ச மறந்து விட்டது ஆச்சரியத்தை ஏற்படுதுகின்றது.

மஹிந்த நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார். அமைச்சரவை மாற்றத்தில் பிரச்சினையில்லை, எனக்கு இது குறித்து எவ்வித பிரச்சினையும் கிடையாது.

மஹிந்த ராஜபக்ச, 2010ம் ஆண்டிலும் 2013ம் ஆண்டிலும் அமைச்சரவையில் மாற்றங்களை செய்திருந்தார். மஹிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை செய்திருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இறுதி நேரத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பழையவற்றை மறந்து விட்டார் போலும் என நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.