Header Ads



சர்வதேச உதைபந்தாட்ட பாடநெறி, தேர்ச்சிபெற்ற முதலாவது இலங்கையர்


ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனம் நடத்திய சர்வதேச உதைபந்தாட்ட நிர்வாகம் தொடர்பான பாடநெறியில் இலங்கையைச் சேர்ந்த ரஹ்மி முஹம்மத் சித்தியடைந்துள்ளார்.

இத்தகைய சர்வதேச பாடநெறியொன்றில் தோற்றி தேர்ச்சி பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொன்டுள்ளார்.

மலேசியாவில் கோலாலம்பூரிலுள்ள ஆசிய உதைபந்தாட்ட சம்மேளன தலைமையகத்தில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட மேற்படி பாடநெறியில் தேர்ச்சி பெற்றுள்ள ரஹ்மி முஹம்மத் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் மனிதவள முகாமையாளராகக் கடமையாற்றி வருகிறார். சர்வதேச உதைபந்தாட்டம் தொடர்பான ஏழு பாடங்கள் உள்ளடங்கிய மேற்படி பாடநெறிக்கு 19 ஆசிய நாடுகளிலிருந்து 24 பேர் பங்குபற்றினர்.

மூன்று கட்டங்களாக 9 மாதங்கள் பாடநெறி நடத்தப்பட்டு கோலாலம்பூரில் பூர்த்தி செய்யப்பட்டது. சர்வதேச மட்டத்தில் இவர் பெற்ற தேர்ச்சி நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் பெருமை தரக்கூடியதொன்றாகும்.

1 comment:

  1. Congratulation Rahmy Mohamed Roomy.you brought honor to Srilanka and kalutara Blue Star sports club too.

    ReplyDelete

Powered by Blogger.